இந்­தி­யாவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் ஒரு வரு­ட­கா­ல­மாக தனது மாமி­யா­ருக்கு தேநீரில் சிறு­நீரை கலந்து­ கொ­டுத்து வந்­த­தாக இந்தூர் மாவட்ட நீதி­மன்றில் வழக்குப் பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது.

30 வய­தான இப்பெண் தனது கண­வரின் தாயார் மீது கடும் அதி­ருப்தி கொண்­டி­ருந்தார். அண்­மையில் இப்­பெண்ணின் தேநீர் கோப்­பைக்குள் சிறுநீர் கழித்­துக்­கொண்­டி­ருப்­பதை அவரின் மாமியார்  நேர­டி­யாகக் கண்­டு­விட்­டாராம்.

இது தொடர்­பாக விசா­ரித்­த­போது, தான் ஒரு­வ­ரு­ட­கா­ல­மாக மாமி­யா­ருக்கு சிறுநீர் கலந்த தேநீரை வழங்கி வந்­ததை ஒப்­புக்­கொண்­டுள்ளார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இப்பெண் 2007 ஆம் ஆண்டு திரு­மணம் செய்­தவர். ஆனால், திரு­ம­ண­மாகி சில மாதங்­க­ளி­லேயே இப்­பெண்­ணுக்கும் அவரின் கண­வ­ருக்கும் இடையில் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன.

தனது கண­வ­ருடன் வாழப்­பி­டிக்­காமல் கண­வரின் வீட்­டி­லி­ருந்து வெளி­யேற அப்பெண் தீர்­மா­னித்தார்.

தன்­னுடன் மீண்டும் இணைந்து வாழ வரு­மாறு அவரின் கணவர் அழைத்­த­போது, பல நிபந்­த­னை­களை விதித்தார் இப்பெண்.

கண­வரே சமைக்க வேண்டும், ஆடை­களை கழுவ வேண்டும், தனக்கு தினமும் பாதத்தில் ஃபூட் மசாஜ் செய்­து­விட வேண்டும் ஆகி­ய­னவும் இந்­நி­பந்­த­னை­களில் அடங்கும்.

இந்­நி­பந்­த­னை­க­ளுக்கு கணவர் சம்­ம­தித்தார். இத்தம்­ப­திக்கு 4 வய­தான ஒரு மகளும் உண்டு.

ஆனால், இப்­பெண்ணின் நட­வ­டிக்­கை­களை மாமியார் விரும்ப­ வில்லை. இதனால், மாமி­யா­ருக்கு சிறுநீர் கலந்த தேநீரை தினமும் கொடுத்­து­வந்­தாராம் இப்பெண்.

இப்பெண்ணை அடுத்த மாதம் 2 ஆம் திகதி நீதி மன்றில் ஆஜராகுமாறு இந்தூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share.
Leave A Reply