கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் வெள்ளிக்கிழமை (11) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
மாலை 5.45 மணியளவில் யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வான், உமையாள்புரம் கண்ணகையம்மன் ஆலயத்துக்கருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது. இதன்போது இருவர் படுகாயமடைந்தள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.