வீடு, மோட்டார் சைக்கிள் என்பவற்றுடன் திருமணம் செய்துகொள்ள ஒரு பெண்ணும் வழங்கும்படி கோரி அதிசக்தி வாய்ந்த மின் கம்பத் தில் ஏறி போராட்டம் செய்த 26 வயதான இளைஞரொருவரை பிரதேசவாசிகள் பெரும் சிரமத்துக்கு மத்தியில் பிடித்து திக்வெல்ல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த இளைஞரை மாத்தளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பின்னர் மனநல வைத்தியரின் அறிக்கை யொன்றை பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி நீதிவான் உத்தவிட்டுள்ளார்.
திக்வெல்ல ரத்மலே வீதிச் சந்தியிலுன்ன சக்திவாய்ந்த மின்கம்பத்தில் ஏறி மின்கம்பிகளுக்கிடையே அமர்ந்திருந்த இளைஞரைப் பார்த்த பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதன் பின்னர் மின்சாரசபைக்கு அறிவிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் இளைஞனை கீழே இறக்குவதற்காகச் சென்ற நபரொருவரை இந்த இளைஞன் தாக்கியுள்ளான்.
பின்னர் மின்கம்பியில் தொங்கி அருகிலுள்ள வேப்ப மரத்துக்குச் செல்ல முயற்சித்த இந்த இளைஞன் கீழே வீழ்ந்துள்ளான்.
காயமுற்ற இளைஞன் அந்த நிலையிலும் அருகிலுள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களைப் பறித்து அருகிலுள்ளவர்கள் மீது எறித்துள்ளார்.
பின்னர் பிரதேசவாசிகள் ஒன்றுதிரண்டு இரவு 8.00 மணியளவில் இளைஞரை கீழே இறக்கி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.