இந்தோனேஷியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மயூரன் சுகுமாரனின் இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை இடம் பெற்றது.
சிட்னியின் பிரதேசத்திலுள்ள DaySpring தேவாலயத்தில் இறுதிக் கிரியைகளுக்கு உரிய ஆராதனைகள் முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றன.
இங்கு மயூரனின் குடும்பத்தவர்களும், அவரது உற்ற நண்பரான ஓவியர் பென் கில்ற்றியும் உரையாற்றியுள்ளார்கள்
raji Sukumaran, mother of Myuran
போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட மயூரன், கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி இந்தோனேஷியாவின் நுசக்கம்பங்கன் தீவில் துப்பாக்கி வேட்டுக்களை நெஞ்சில் தாங்கி மரணத்தைத் தழுவினார்.
அவருடன் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட அன்ட்ரூ சானின் இறுதிக் கிரியைகள் நேற்று சிட்னியில் இடம்பெற்றன. உற்றார், உறவினர், நண்பர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு சானுக்கு பிரியாவிடை அளித்தார்கள்.
மயூரன் தம்மை விட்டு நிரந்தரமாக பிரியாவிடை பெற்றுச் செல்லும் தருணத்தில், அவரது புகைப்படங்கள் அடங்கிய ஆல்பத்தை பகிரங்கப்படுத்தியுள்ளனர்.
இதிலுள்ள படங்கள் மயூரனின் இளமை வாழ்க்கையையும், குத்துச் சண்டையில் அவருக்கு இருந்த ஆர்வத்தையும் புலப்படுத்தி நிற்கின்றன.
Sukumaran’s sister Brintha spoke, holding back tears as she delivered a eulogy to her older brother, who she called her ‘hero
‘Brintha struggled to start her speech when she took to the stage and took a long pause before she started

Myuran Sukumaran poses with his artwork inside Kerobokan jail in Bali back in 2013
