மட்டக்களப்பு தளவாய்ப் பிரதேசத்தில் விறகு வெட்ட காட்டுப் பகுதிக்குள் சென்ற தமிழ் பெண்கள் மீது இரும்பு தடியால் அடித்து தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தளவாயைச் சேர்ந்த குணம் சிறிதேவிப்பிள்ளை (56 வயது), ஐயங்கேணியைச் சேர்ந்த சித்திரவேல் இராசம்மா (60 வயது) ஆகிய இருவருமே தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுடன் சென்ற மற்றுமொருவர் தாக்குதலிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மட்டக்களப்பு தளவாய் காட்டுப் பகுதியில் விறகு வெட்டிக் கொண்டிருந்த பெண்கள் மீது போதையில் இருந்ததாக கூறப்படும் குறித்த இளைஞன் பாலியல் ரீதியில் அணுகியுள்ளார.
அதை ஏற்க மறுத்த குறித்த வயோதிப் பெண்கள் மீது அருகிலிருந்த இரும்பு தடியால் அடித்து தாக்கியுள்ளார்.