இரத்­தி­ன­பு­ரி­யி­லி­ருந்து எம்­பி­லி­பிட்­டியை கடந்து செல்லும் போது உள்­ளது கொலம்­பகே ஆர எனும் அழகியகிராமம்.

உட­வ­லவ பொலிஸ் பிரிவில் அமைந்­துள்ள இந்த கிரா­மத்தில் தனது தாய் தந்தை மற்றும் இரு சகோ­த­ரி­க­ளுடன் வாழ்ந்து வந்தான் 16 வய­தான ஹசித்த நெரஞ்சன்.

கொலம்­பகே ஆர மகா வித்­தி­யா­ல­யத்தின் க.பொ.த. சாதா­ரண தரத்தில் கல்வி பயின்று வந்த ஹசித்த நெரஞ்சன் அமை­தி­யான சாது­வான பையன்.

அன்று ஜூன் 14ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை க.பொ.த சாதா­ரண தர மாண­வர்­களைப் பொறுத்­த­வரை ஓய்­வற்ற நாள். தொட­ரான வகுப்­புக்­களால் நிரம்­பிய நாள்.

ஆம் அந்த பொது­வான விட­யத்­துக்கு ஹசித்த நெரஞ்சன் கொலம்­பகே ஆர எனும் கிரா­மமோ விதி­வி­லக்­கல்ல. அங்கும் அதே வழ­மைதான். நிலை­மைதான்.

அன்று பின்நேர­மா­னது. ஹசித்த நெரஞ்சன் மேல­திக வகுப்­புக்­காக வீட்­டி­லி­ருந்து சென்றான். அந்த மேல­திக வகுப்பு கொலம்­பகே ஆர மகா வித்­தி­யா­ல­யத்தில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் உள்­ளது.

இன்னும் தெளி­வாக சொல்­வ­தென்றால் ஹசித்த நெரஞ்­சனின் வீட்­டி­லி­ருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள மிரிஸ்­வெல்­பென சந்­திக்­க­ருகில் உள்­ளது.

இந்த மேல­திக வகுப்­புக்கு சென்ற ஹசித்த நெரஞ்சன் மாலை­யா­கியும் வீடு திரும்­ப­வில்லை. ஹசித்­தவின் பெற்றோர் தமது மகன் இன்னும் வீடு வரா­ததால் மேல­திக வகுப்பு இருக்கும் இடம் வரை சென்று தேடினர்.

அங்கு யாரும் இருக்­க­வில்லை. வகுப்பு முடிந்­தி­ருந்­தது. எனினும் தேடலை கைவி­டாத பெற்றோர் ஹசித்த நெரஞ்­சனின் நண்­பர்­களை நாடி விசா­ரித்­தனர்.

அதிலும் பல­னில்லை. ஹசித்த நெரஞ்சன் வகுப்­புக்கே வர­வில்லை என நண்பன் ஒரு­வரின் கூற்று பெற்­றோ­ருக்கு மேலும் பயத்தை உண்டு பண்­ணி­யது.

நேரம் செல்லச் செல்ல அச்சம் அதி­க­ரித்­தது. அதன் பலன் இறு­தியில் உடவலவ பொலிஸ் நிலை­யத்­திற்கு பெற்­றோரை அழைத்துச் சென்­றது.

udavala”சேர்… மேல­திக வகுப்­புக்குச் சென்ற மகனை காண­வில்லை சேர்…. எனக்­குள்ள ஒரே மகன் சேர்…. எப்­ப­டி­யா­வது கண்டு பிடித்துக் கொடுங்கள்.. சேர்….” என பெற்றோர் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யிடம் கெஞ்­சினர்.

அந்த கெஞ்சல் முறைப்­பாட்டை யடுத்து பொலி­ஸா­ருடன் சேர்ந்து ஊர் மக்­களும் ஹசித்த நெரஞ்­சனை தேடி விசேட வேட்டை ஒன்றை ஆரம்­பித்­தனர். எனினும் உட­ன­டி­யாக எந்த பலனும் கிடைக்­க­வில்லை.

நேரமோ நள்­ளி­ரவு 12.00 மணியைக் கடந்­தது. ஊரார் நித்­தி­ரைக்கு செல்­ல­வில்லை. தொடர்ச்­சி­யாக ஹசித்­தவை தேடினர்.

அப்­போது 15ஆம் திகதி திங்கள் அதி­காலை 3.50 மணி இருக்கும். ஹசித்த நெரஞ்­சனின் வீட்­டி­லி­ருந்து சுமார் ஒன்­றரைக் கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ஒரு குறுக்குப் பாதையில் சந்­தே­கத்­துக்கு இட­மான இரத்தக் கறைகள் இருப்­பது ஊராரால் அவ­தா­னிக்­கப்­பட்­டது.

பிர­தான வீதியில் இருந்து உள் நோக்கி செல்லும் அந்த குறுக்கு வீதியின் 500 மீற்­றர்­க­ளுக்கு அப்­பா­லேயே அந்த இரத்தக் கறை இருந்­தது.

விடயம் உட­ன­டி­யாக உட­வ­லவ பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் டபிள்யூ.ஜி. பண்­டா­ர­விற்கு அறி­விக்­கப்­பட்­டது.

பொலிஸ் பரி­சோதர் பண்­டார உடன் செயற்­பட்டு விட­யத்தை எம்­பி­லி­பிட்­டிய பொலிஸ் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பாலித்த சிறி­வர்­தன உட­வ­லவ பிர­தே­சத்­துக்கு பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் தர்­ம­ரத்ன ஆகி­யோரின் கவ­னத்­திற்கு கொண்டு வந்து அவர்­களின் ஆலோ­சனையின் பிர­காரம் ஸ்தலத்துக்கு விரைந்தார்.

கூடவே உட­வ­லவ பொலிஸ் நிலைய குற்­ற­வியல் பிரி­வுக்கு பொறுப்­பான பொறுப்பதி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் அம­ர­சிறி பெரேரா உள்­ளிட்ட குழு­வி­ன­ரையும் அவர் அழைத்துச் செல்ல தவ­ற­வில்லை.

ஸ்தலத்துக்கு விரைந்த போது குறித்த இரத்தக் கறை இருந்த இடத்­தி­லி­ருந்து சுமார் 30 மீற்றர் தூரத்­துக்கு தொடர்ச்­சி­யாக பாதையில் இரத்தம் வழிந்­தி­ருப்­பது அவ­தா­னிக்­கப்­பட்­டது.

அந்த 30 மீற்­ற­ருக்கு அப்பால் பாதையில் எந்த அடை­யா­ளமும் இல்லை. அப்­போது நேரம் அதி­காலை 4.30 மணியைக் கடந்­தி­ருந்­தது.

இரத்தக் கறை முடி­வ­டைந்த இடத்­தி­லி­ருந்து பாதையின் வலது பக்­க­மாக தேக்கு மரக் காட்­டி­னுள்ளே 3 அடிக்கு மேல் அடர்ந்து வளர்ந்த பற்­றை­க­ளுக்குள் யாரும் எதிர்­பார்க்­காத அந்த விடயம் பொதிந்­தி­ருந்­தது.

ஆம். ஹசித்த நெரஞ்சன் இரத்த வெள்­ளத்தில் கிடந்தான். பெற்றோர் கத­றினர். மற்றோர் சோகத்தில் மயங்­கினர். பயன் என்ன? அப்­போது ஹசித்த நெரஞ்சன் இவ் உல­கிற்கு விடை கொடுத்­தி­ருந்தான்.

அணிந்­தி­ருந்த இளம் சாம்பர் நிற முக்கால் காற்­சட்­டையில் தொடைப் பகு­தியை ஊட­றுத்து ஒரு வெட்டுக் காயம். இரு கைகளும் கழுத்தை நோக்கி மடக்கி இருக்க கழுத்தோ அறுக்­கப்­பட்­டி­ருந்­தது.

அணிந்­தி­ருந்த டீ சேட் நெஞ்சுப் பகு­தி­வரை மேல் உயர்ந்­தி­ருக்க முதுகுப் பகு­தி­யிலும் வயிற்றுப் பகு­தி­க­ளிலும் கீறல்கள், இரத்தக் கறைகள்.

5361-death-body-found-in-udawalawa674033238அடக் கட­வுளே… எப்­படிப் பார்ப்­பது அந்த நிலை­மையை. பதறிப் போனது கொலம்­பகே ஆர கிராமம். திண­றினர் உற­வி­னர்கள். உடன் செயற்­பட்டார் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பண்­டார.

ஒவ்­வொ­ரு­வரும் தமக்குத் தெரிந்த கதை­களை கதைத்துக் கொண்­டி­ருக்க பொலிஸ் பரி­சோ­தகர் பண்­டா­ரவோ தனது கட­மையை செய்­ய­லானார்.

வாக்கு மூலங்­களை பதிந்து காணாமல் போயுள்ளார் என வழங்­கிய முறைப்­பாட்டில் சட­ல­மாக மீட்­கப்­பட்டார் என்­பதை இணைக்க பெற்­றோரை உடன் அழைத்துச் சென்றார் அவர்.

உட­வ­லவ பொலிஸ் நிலை­யத்­துக்கு போகும் வழியில் பொலிஸ் பரி­சோ­தகர் ஹசித்­தவின் அம்­மா­விடம் கதை கொடுத்தார்.

அம்மா….. குற்­ற­வா­ளி­களை நாம் எப்­ப­டி­யேனும் பிடிப்போம்…. என்ன செய்­வது உங்­க­ளுக்கு ஆறுதல் கூற எனக்குத் தெரி­ய­வில்லை….. என கூறி­ய­வாறு சிறிது நேரம் அமைதி காத்த பொலிஸ் பரி­சோ­தகர் பண்­டார தனக்குத் தேவை­யான அந்தக் கேள்­வியைக் கேட்டார்.

அம்மா…. மக­னுக்கு யாரு­ட­னா­வது பிரச்­சி­னைகள் இருந்­ததா? அந்தக் கேள்­விக்கு ஹசித்­தவின் அம்மா தந்த பதில் நடந்­தது என்ன என்­பதை அம்­ப­லப்­ப­டுத்­தி­யது.

சேர்… எனக்கு தெரிந்த அளவில் பெரிய பிரச்­சி­னைகள் என்று எதுவும் இல்லை. அவன் ஜீவா (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) என்ற பெண்ணை காத­லிக்­கிறான். அது தொடர்பில் ஒரு ஆட்­டோக்­கார பைய­னுடன் பிரச்­சி­னைப்­பட்டான். அவ்­வ­ள­வுதான் என ஹசித்­தவின் அம்மா பொலிஸ் நிலையம் போவ­தற்கு முன்­பா­கவே முக்­கி­ய­மான தக­வலை வழங்­கினார்.

பொலிஸ் பரி­சோ­தகர் பண்­டா­ரவின் மூளை உடன் இயங்­கி­யது. தனது தொலை­பே­சியை எடுத்தார். பொலிஸ் பரி­சோ­தகர் அம­ர­சிறி பெரே­ராவை அழைத்தார். மூன்று குழுக்­களை அழைத்தார்.

அத­னு­டா­கவே முச்­சக்­க­ர­வண்டி சாரதி சுஜீ­வவை தேடினார். பெற்­றோரின் வாக்கு மூலம் எடுத்து முடி­வ­தற்குள் சுஜி­வவை பொலிஸ் நிலையம் கொண்டு வந்து சேர்த்தார்.

சூரியன் உதித்து வெளிச்சம் படர்ந்­தி­ருந்த அவ்­வே­ளையில் எம்­பி­லிப்­பிட்­டிய நீதிவான் காஞ்சனா  என்.சில்வாவும் ஸ்தலத்துக்கு விரைந்து பரி­சோ­தனை மேற்­கொண்டு விட்டு சட­லத்தை பிரேதபரிசோதனைக்காக இரத்­தி­ன­புரி வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பினர்.

பிரேத பரி­சோ­தனை அறிக்கை வரு­வ­தற்குள் சந்­தேக நபரை கைது செய்ய பொலி­ஸாரால் முடிந்­தது.

“சேர்……அடிக்­கா­தீர்கள்…நான் தான் அனைத்­தையும் செய்தேன். அவ­ளுக்­கா­கத்தான் …அவனைதீர்த்துக்கட்டினேன்… சேர்…அவன் இருந்தால் எனக்கு அவள் கிடைக்­க­மாட்டாள்” என சுஜீவ உண்­மை­களை உள­றினான்.

அதனை தொடர்ந்து பிரேத பரி­சோ­தனை அறிக்­கை­யையும் பெற்ற பொலிஸார் கழுத்தை அறுத்­ததில் ஏற்­பட்ட ஆழ­மான காயம் மர­ணத்­துக்­கான காரணம் என தெரிந்து கொண்­ட­துடன் மேல­திக விசா­ர­ணை­களை தொடர்ந்­தனர்.

பொலிஸ் விசா­ர­ணை­களில் சந்­தேக நப­ரான சுஜீவ வெளிப்­ப­டுத்­திய தக­வல்­க­ளின்­படி ஹசித்த நெரஞ்­சனும் ஜீவாவும் ஒரே வகுப்பு மாண­வர்கள்.

ஹசித்­த­வுக்கு ஜீவா மீது காதல். ஜீவா­வுக்கும் ஹசித்த மீது ஒரு கண்­ணி­ருந்­தாலும் அவள் தனது விருப்­பத்தை வெளிப்­ப­டை­யாக ஹசித்­த­வுக்கு கொடுத்­தி­ருக்­க­வில்லை. எனினும் ஜீவா­வுக்கும் ஹசித்­த­வுக்கும் இறுக்­க­மான ஒரு நட்­புடன் கூடிய உறவு இருந்து வந்­துள்­ளது.

எந்­த­ள­வுக்கு எனில் ஜீவாவை எவரும் பகிடி செய்தால் அவர்­க­ளுடன் சண்­டை­யிடும் அள­வுக்கு அது நீண்­டது. அப்­ப­டி­யான பின்­ன­ணியில் ஒருநாள் 21 வய­தான சுஜீவ தனது முச்­சக்­க­ர­வண்­டியில் வந்­த­வாறே ஜீவா­வுக்கு தனது தொலை­பேசி இலக்­கத்தை கொடுத்து காதல் விண்­ணப்பம் செய்­துள்ளான்.

இவ் விட­யத்தை ஜீவா ஹசித்­த­வுக்கு கூறவே அவன் சுஜீ­வ­வுடன் சண்­டை­யிட்­டுள்ளான். இது தான் ஹசித்­தவின் அம்மா பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிக்கு சொன்ன அந்த முறைப்­பாடு.

இந்த நிலையில் தான் கடந்த 14 ஆம் திகதி மேல­திக வகுப்­புக்கு செல்லும் போது ஹசித்­தவை கடத்தும் நாடகம் அரங்­கே­றி­யுள்­ளது. இந்த கடத்­த­லுக்கு இந்­தி­கவும் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) சம்­பந்­தப்­பட்­டி­ருக்க வேண்டும். என பொலிஸார் சந்­தே­கிக்கும் நிலை அங்­குதான் உரு­வா­னது.

18 வய­தான இந்­தி­க­வுடன் ஹசித்த கதைத்­துக்­கொண்­டி­ருந்­ததை பலர் அவ­தா­னித்­துள்ள நிலையில் அதன் பின்­னரே அவன் மாய­மா­கி­யுள்ளான்.

இந்­நி­லையில் இந்­தி­க­வையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்­தனர். சுஜீவ, இந்­திக இரு­வ­ரையும் கைது செய்­தனர்.

இந்­திக தன் மீதான குற்­றச்­சாட்­டுக்­களை மறுக்க சுஜீ­வவோ தான் மட்­டுமே தனது முச்­சக்­க­ர­வண்­டியில் சென்று இந்த கொடூ­ரக்­கொ­லையை செய்­த­தாக ஒப்­புதல் வாக்கு மூலம் அளித்­துள்ளான்.

“சேர் நான் மட்டும் தான் இதனை செய்தேன்… ஜீவா தொடர்­பான பிரச்­சி­னையை தீர்த்­துக்­கொள்வோம் எனக் கூறி ஆட்­டோவில் கூட்­டிக்­கொண்டு போனேன்.

ஹசித்­தவின் வீட்டின் முன்னால் அவனை அழைத்­துச்­சென்றேன். சிறிது தூரம் சென்று அவனை கத்­தியால் வெட்டிக் கொன்றேன். சட­லத்தை காட்­டுக்குள் இழுத்து சென்று வீசினேன் என சுஜீவ பொலி­ஸா­ரிடம் குறிப்­பிட்­டுள்ளான்”

எனினும் பொலிஸார் இதனை முழு­மை­யாக நம்­பத்­த­யா­ராக இல்லை. தனி­யாக இதனை செய்­தி­ருக்க முடி­யாது என கூறும் பொலிஸார் இந்­திக துணையும் அதற்கு பெறப்­பட்­டி­ருக்க வேண்டும் என சந்­தே­கித்­தனர்.

இதனை விட மேலும் ஒரு­வ­ருக்கோ அல்­லது சில­ருக்கோ தொடர்பு இருக்க வேண்டும் எனவும் அவர்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில் கழுத்துப்பகுதியில் உள்ள சிராய்ப்பு காயங்கள் சுஜீவவுடனான அவனது தொடர்பு ஆகியவற்றை வைத்தே அவனை கைது செய்த பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி கொலையின் போது சுஜீவ அணிந்திருந்த ஆடைகள் முச்சக்கரவண்டி என்பனவற்றை இவ் வழக்கின் தடயப் பொருட்களாக பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதான சுஜீவவும் இந்திக்கவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜீவாவிடம் பொலிஸாரால் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.

இக்கொலையுடன் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கருதும் பொலிஸார் சந்தேக நபர்களின் வாக்கு மூலத்துக்கு மேலதிகமாக அறிவியல் தடயங்களை வைத்து விசாரித்து வருகின்றனர். எது எப்படியோ காதலால் உயிர் பறிக்கப்பட்டோர் பட்டியலில் ஹசித்த நெரஞ்சனின் பெயரும் பதிவாகி விட்டது.

Share.
Leave A Reply