ரியாத்: அமெரிக்காவால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் மகன், தனது தந்தையின் இறப்புச் சான்றிதழை வழங்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் கோரியதாக விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் 110 மாடி இரட்டை கோபுரத்தின் மீதும் விமானங்களை மோதி கடந்த 2001 செப்டம்பர் 11 ஆம் தேதி தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
உலகையே அதிர்ச்சியடைய வைத்த இந்தத் தாக்குதலில், 3 ஆயிரம் பேர் பலியாயினர். இதற்கு மூளையாக இருந்து செயல்படுத்தியவர் அல்-கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன்.
இதனால் அவரைத் தேடி பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த அமெரிக்க ராணுவம், பாகிஸ்தானில் அப்போதாபாத் என்ற இடத்தில் பின்லேடன் பதுங்கியிருந்தபோது, கடந்த 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி, “ஆபரேஷன் நெப்டியூன் ஸ்பியர்” என்ற பெயரில் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டு கொன்றது.
இந்நிலையில், ஒசாமா பின்லேடன் மகன் தனது தந்தையின் இறப்பு சான்றிதழை கேட்டு ரியாத்துக்கான அமெரிக்க தூதருருக்கு கடிதம் எழுதியதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
பின்லேடன் கொல்லப்பட்டு நான்கு மாதங்கள் கழித்து எழுதப்பட்ட இந்த கடிதத்தில், பின்லேடனின் இறப்பு சான்றிதழ் கேட்டு அவரது மகன் அப்துல்லா பின்லேடன் கடிதம் எழுதியுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள அமெரிக்க தூதர் கிளென் கீஸர், “உங்கள் தந்தை ஒசாமா பின்லேடன் இறப்பு சான்றிதழ் கேட்டு நீங்கள் அனுப்பியிருந்த கடிதம் எனக்கு கிடைத்தது.
அமெரிக்க வெளியுறவு துறையின் சட்ட நிபுணர்கள் இது போன்ற ஆவணங்கள் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.
ராணுவ நடவடிக்கையில் நடைபெறும் இதுபோன்ற தனிநபர் கொலைகள் வழக்கமானவைதான்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பின்லேடன் கொல்லப்பட்டதால் அவருக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் கைவிடப்பட்டன என்று அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்திய நீதிமன்ற ஆவணங்களை, பின்லேடன் மகனுக்கு அனுப்பியுள்ள அமெரிக்க தூதர், இந்த ஆவணங்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் உதவியாக இருக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளா