ரிங் ரிங் ரிங்……………

“ஹலோ! நான் ரியாஸ் கதைக்­கின்றேன்.. நீங்கள் யார்?” என்று வின­வினார்.

அதற்கு மறுமுனையில் “ ஹலோ ! முத­லாளி நான் யார் என்­பது உனக்குத் தேவை­யில்லை. நான் சொல்லும் விட­யத்தைக் கேளு. உன்­னு­டைய ஆசை மகன் இப்­போது மொண்­ட­சோ­ரியில் இல்லை.

இப்­போது எங்­க­ளிடம் தான் இருக்­கின்றான். குழந்தை வேணு­மென்றால் நீ எங்­க­ளுக்கு 30 இலட்சம் ரூபா தர வேண்டும். இதை மீறி நீ பொலி­ஸா­ருக்கு தக­வலை வழங்கிக் குழந்­தையை மீட்க நினைத்தால் நடப்­பதோ வேறு!”

 

……………………………………………………………………….

தொடர்ந்து…

“கப்பம் பெறுவதற்காகவும், பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்காகவும் சிறுவர், சிறுமியர் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுவது நாளைய எதிர்காலத்தையே கேள்விக் குறியாகியுள்ளது”

அன்று நண்­பகல் 12 மணி யி­ருக்கும். பிர­பல வர்த்­தகர் ரியாஸின் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது.) தொலை­பேசி வழ­மை­யான ஒலி நாதங்­க­ளுடன் ஒலிக்­கின்­றது.

ரிங் ரிங் ரிங்…………….

பர­ப­ரப்­பான வியா­பார சூழலில் இயந்­தி­ரமாய் இயங்கிக் கொண்­டி­ருந்த ரியாஸ் சட்டைப் பையி­லி­ருந்த தனது தொலை­பே­சியைக் கையில் எடுத்துப் பார்க்­கின்றார்.

அப்­போது அது அடை­யாளம் தெரி­யாத தொலை­பேசி இலக்க­மா­க­வி­ருக்­கின்­றது. எனவே, யாராக இருக்கும் என்று சிந்­தித்­த­வாறே  தொலை­பேசி அழைப்­புக்குப் பதி­ல­ளிக்­கின்றார்

“ஹலோ! நான் ரியாஸ் கதைக்­கின்றேன்.. நீங்கள் யார்?” என்று வின­வினார்.

அதற்கு மறுமுனையில் “ ஹலோ ! முத­லாளி நான் யார் என்­பது உனக்குத் தேவை­யில்லை. நான் சொல்லும் விட­யத்தைக் கேளு. உன்­னு­டைய ஆசை மகன் இப்­போது மொண்­ட­சோ­ரியில் இல்லை.

இப்­போது எங்­க­ளிடம் தான் இருக்­கின்றான். குழந்தை வேணு­மென்றால் நீ எங்­க­ளுக்கு 30 இலட்சம் ரூபா தர வேண்டும். இதை மீறி நீ பொலி­ஸா­ருக்கு தக­வலை வழங்கிக் குழந்­தையை மீட்க நினைத்தால் நடப்­பதோ வேறு!”

என்று அடை­யாளம் தெரி­யாத தொலை­பேசி இலக்­கத்­தி­லி­ருந்து பதில் வந்­தது.

இதனைத் தொடர்ந்து ரியாஸ் அதிர்ச்­சியில் உறைந்து போனார். அவ­ரு­டைய தலையில் பெரிய பாறாங்­கல்லை யாரோ போட்­டது போல் இருந்­தது.

தனது தலையில் இரண்டு கைக­ளாலும் அடித்துக் கொண்டு, நிலை குலைந்­த­வராய் “ஐயோ நீங்கள் என்ன சொல்­கின்­றீர்கள்.

என்­னு­டைய மகனை ஒன்றும் செய்து விடா­தீர்கள். என்னால் அவ்­வ­ளவு சீக்­கி­ரமாய் 30 இலட்­சத்தைத் தேட முடி­யாது. நான் வேணு­மென்றால் 10 இலட்சம் தரு­கின்றேன்.

தயவு­செய்து எனது மகனை விட்டு விடுங் கள்” என்று ரியாஸ் அந்தக் கொடி­ய­வனை நோக்கிக் கெஞ்சி மன்­றா­டினார். ரியாஸின் மன்­றாடல் ஓர் அப்­பாவித் தந்­தையின் அழு­கு­ரலாய் இருந்­தது.

ரியாஸ் வவு­னியா நகரில் பிர­பல்­ய­மான வர்த்­தகர் ஆவார். சிறு வயது முதலே துணி­வோடும், தன்­னம்­பிக்­கையுடனும் போராடி வவு­னியா நகரில் வியா­பா­ரத்தில் தனக்­கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்­தவர்.

அது­மட்­டு­மின்றி, ஊருக்­குள்ளும் ரியா­ஸூக்­கென்று ஒரு நல்ல மதிப்பும், மரி­யா­தையும் இருந்­தது. “ரியாஸ்” என்று பெயர் சொல்லிக் கேட்டால் தெரி­யா­த­வர்கள் யாருமே இருக்க முடி­யாது.

மேலும் இவை எல்­லா­வற்­றையும் விட ரியாஸ் தனது மனைவி மீதும், இரு மகன்­மார்கள் மீதும் அளவு கடந்த பாசத்தை வைத்­தி­ருந்தார்.

எத்­த­கைய பர­ப­ரப்­பான சூழ­லிலும் தனது குடும்­பத்­தி­ன­ருக்­காக நேரத்தைச் செல­வ­ழிக்கத் தவ­ற­வில்லை. அதுவும் குடும்­பத்தின் கடைக்­குட்­டி­யான இளைய மகன் நியாஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மீது அளவு கடந்த பாசத்தை வைத்­தி­ருந்தார்.

பெரும்­பாலும் அவ­னுக்கு வேண்­டிய அனைத்­தையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரியாஸ் பார்த்துப் பார்த்து செய்வார்.

மேலும் ரியாஸ் தனது வர்த்­தக நிலை­யத்­துக்குச் செல்லும் போதே பிள்­ளைகள் இரு­வ­ரையும் கையோடு அழைத்துச் சென்று பாட­சா­லையில் விட்டு விட்டு தனது வர்த்­தக நிலை­யத்­துக்கு செல்­வதை வழக்­க­மாகக் கொண்­டி­ருந்தார்.

முதலில் மூத்த மகனை 7.30 மணி­ய­ள வில் பாட­சா­லையில் விட்டு விட்டு இறு­தி­யாக இளைய மகனை வேப்­பங்­கு­ளத்­தி­லுள்ள பாலர் வகுப்பில் விட்டுச் செல்வார்

இந்­நி­லையில் ரியாஸின் 5 நேர தொழு­கையும், “ தனது குடும்­பத்­தி­ன­ருக்கு எந்த வித ஆபத்தும் நேர்ந்து விடக் கூடாது என்று இறை­வனை நோக்­கிய பிரார்த்­த­னை­யா­கவே இருக்கும். அவ்­வா­றி­ருக்­கையில்,

அன்­றைய விடியல் (2015.06.12) ரியாஸின் குடும்­பத்தை நோக்கிப் பெரும் பேரி­டி­யா­கவே இருந்­தது. அதி­காலையி­லேயே எழுந்து தனது தொழு­கையை முடித்து விட்டு, மனை­வியின் கையால் சமைத்த உண­வினை சாப்­பிட்டு விட்டு, பிள்­ளை­களை  கையோடு அழைத்துக் கொண்டு வீட்­டி­லி­ருந்து புறப்­பட்டார்.

வழமை போல் மூத்த மகனை பாட­சா­லையில் விட்டு விட்டு அவ­ரு­டைய செல்ல மக­னான நியாஸை வேப்பங்கு­ளத்­தி­லுள்ள பாலர் பாட­சா­லைக்கு கூட்டிச் சென்றார்.

அதன்பின் பாலர் வகுப்பு வாச­லி­லேயே பிள்­ளையின் தலையைத் தடவி, உச்சிமோர்ந்து தனது அன்பை வெளிப்­ப­டுத்தி வழி­ய­னுப்பி வைத்து  விட்டு பிள்ளை  தனது  நண்பர் கூட்­டத்­து­டனும் ஆசி­ரி­யர்­க­ளு­டனும் போய்ச் சேரும் வரை வாசலில் இருந்­த­வாறு பார்த்துக் கொண்­டி­ருந்தார்.

அதன்பின் பிள்ளை அவர்­க­ளுடன் ஒன்­றாக இணைந்த பிறகு குழந்­தையின் பாது­காப்புத் தொடர்­பாக எவ்­வித சந்­தே­கமும் கொள்­ளாது அவ்­வி­டத்தை விட்டுச் சென்று விடுவார்.

எனினும் அதன்பின் தனக்கும் தனது குடும்­பத்­தி­ன­ருக்கும் எதி­ராக பெரும் சதி முயற்­சி­யொன்று இடம்­பெறப் போகின்­றது என்­பதை ரியாஸ் சற்றும் எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை.

சூரி­யனின் கதிர்கள் சுட்­டெ­ரிந்து கொண்­டி­ருந்த நேர­மது. சரி­யாக நண்­பகல் 12 மணி­யி­ருக்கும். ரியாஸ் மும்­மு­ர­மாக தனது வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டு­க்கொண்­டி­ருந்தார்.

அப்­போது அநா­ம­தேய தொலை­பேசி அழைப்­பொன்று வந்­துள்­ளது. அந்த அழைப்பில் ”உங்­க­ளது இளைய மகனை கடத்தி வைத்­துள்ளோம் 30 இலட்சம் ரூபாவை உட­ன­டி­யாகச் செலுத்­தினால் பிள்­ளையை உயி­ருடன் பார்க்க முடியும்” என்றும் அச்­சு­றுத்­தி­யுள்­ளனர்.

அதனைத் தொடர்ந்து குழப்­ப­மடைந்த ரியாஸ் எதற்கும் பாட­சா­லையில் சென்று பார்ப்போம் என்ற முடிவில் வேப்­பங்­கு­ளத்­தி­லுள்ள பாலர் பாட­சா­லைக்குச் சென்று தனது தங்க மகனின் முகத்தைத் தேடினார்.

எனினும் எங்கு தேடியும் பிள்ளை இருக்­க­வில்லை. எனவே குழந்தை கடத்­தப்­பட்டு விட்­டது என்­பது ரியா­ஸூக்கு உறு­தி­யா­னது.

ஆயினும் யார் பிள்­ளையைக் கடத்தி இருப்­பார்கள்? என்­பது மட்டும் புரி­யாத புதி­ரா­கவே இருந்­தது. பாட­சாலை ஆசி­ரி­யர்­க­ளி­டமும், நிர்­வா­கத்­தி­ன­ரி­டமும் இது பற்றி வின­வி­ய­போது “முத­லாளி கூட்டி வரச் சொன்னார் என்று கூறி சிலர் பிள்­ளையை வேனில் அழைத்துச் சென்­றார்கள்.

அதன்பின் என்ன நடந்­தது என்று எங்­க­ளுக்குத் தெரி­யாது” என்று அவர்கள் பதி­ல­ளித்­தனர். ரியா­ஸூக்கு தலை சுற்­றி­யது. இதயம் வழ­மைக்கு மாறாகப் பட­ப­டத்­தது.

நினை­வுகள் எல்லாம் தொலைந்­த­வராய் அங்கும், இங்கும் அலைந்து திரிந்து கப்­பக்­கா­ரர்­க­ளுக்கு தரு­வதாய் உறு­தி­ய­ளித்த 10 இலட்சம் ரூபாவைத் திரட்­டினார்.

அதன்பின் கப்­பக்­கா­ரர்­களின் தொலை­பே­சிக்கு அழைப்பை ஏற்­ப­டுத்தி பணத்தை எங்கு கொண்டு வர வேண்டும் என்று வின­வினார்.

எனினும் அந்த கப்­பக்­கா­ரர்கள் சரி­யாக எந்த இடத்­தையும் தெரி­விக்­காமல் ஒவ்­வொரு தொலைபேசி அழைப்­புக்கும் ஒவ்­வொரு இடத்தைக் கூறி அங்கும், இங்கும் அலைய வைத்­தனர்.

இறு­தியில் வவு­னியா பூவ­ர­சங்­குளம் பகு­தியில் குப்­பைகள் கொட்­டப்­படும் இடத்தில் பணத்தை வீசி விட்டுச் செல்­லு­ மாறு பணித்­துள்­ளனர்.

அதன்பின் ரியா ஸூம் பணப்­பையை அங்கு வீசி விட்டு பிள்ளை வீட்­டுக்கு வந்­தி­ருக்கும், அவர்கள் கொண்டு வந்து விட்­டி­ருப்­பார்கள் என்ற எதிர்­பார்ப்பில் வீட்டை நோக்கிச் சென்றார்.

எனினும் அங்கு ஏமாற்றம் மட்­டுமே மிஞ்­சி­யி­ருந்­தது. சதா புன்­ன­கை­யுடன் வலம் வரும் மனைவி முகத்தில் புன்­ன­கையைக் காண­வில்லை.

சுய நினை­வி­ழந்து, பிள்­ளையைப் பறி­கொ­டுத்த ஏக்­கத்தில் பித்­துப் பிடித்­த­வளாய்க் கிடந்தார். மூத்த மகன் தன்­னோடு ஓடி­யாடி விளை­யா­டிய தம்பி இல்­லாத தனி­மையில் ஒரு மூலையில் சிந்­த­னையில் ஆழ்ந்­தி­ருந்தான்.

மொத்­தத்தில் இழவு விழுந்த வீட்டைப் போன்று ரியாஸின் வீடு காட்­சி­ய­ளித்­தது. ரியா­ஸூக்கு எது­வுமே புரி­ய­வில்லை. பணத்தைக் கொடுத்தும், குழந்­தையைப் பற்றி எவ்­வித தக­வலும் கிடைக்­க­வில்லை என்று புலம்­பினார்.

பல முறை எனது பிள்­ளை­க­ளுக்கு நல்ல தந்­தை­யாகத் தானே இருந்தேன். அப்­ப­டி­யி­ருக்­கையில் இறைவன் ஏன்? எனக்கு இவ்­வ­ளவு பெரிய சோத­னையைத் தந்தார் என்று இறை­வனை சபித்தார்.

இத­னி­டையே இறைவன் ரியாஸின் பிராத்­த­னையைக் கேட்டார் போல் கப்­பக்­கா­ரர்­க­ளி­ட­மி­ருந்து ரியா­ஸூக்கு தக­வ­லொன்று கிடைக்­கப்­பெற்­றது. அந்தத் தக­வ­லின்­படி ரியாஸின் வீட்­டுக்கு அரு­கி­லுள்ள பட்­டாணிச் சூர் முஸ்லிம் பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் பிள்­ளையை விடு­வித்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

இதனைத் தொடர்ந்து ரியாஸூம், மனை­வியும் அங்கு விரைந்து சென்­றார்கள். அப்­போது இரவு 8.00 மணியிருக்கும்.

அந்த இருள் சூழ்ந்த இரவில் பிள்ளை தனி­யாக நின்று கொண்­டி­ருந்­தது. தோளிலும், மார்­பிலும் போட்டுச் சீராட்டி மகிழ்ந்த மகனைக் கண்­ட­வுடன் பெற்றோர் இரு­வரின் மகிழ்ச்­சிக்கும் அளவே இருக்­க­வில்லை. அள்ளி அணைத்து முத்த மழை பொழிந்­தனர்

அதன்பின் பிள்­ளையை வீட்­டுக்கு அழைத்துச் சென்று சில மணி நேரங்கள் கடந்த பின் ஆழ்ந்த சிந்­த­னையில் ஈடு­பட்ட ரியாஸ் பொலி­ஸா­ருக்கு மேற்­படி சம்­ப­வத்தை அறி­விப்போம் என்ற முடி­வுக்கு வந்தார்.

அதன்­படி இரவு 9.30 மணி­ய­ளவில் வவு­னியா பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு ஒன்­றினைப் பதிவு செய்தார்.

அந்த முறைப்­பாட்­டுக்கு அமைய கடத்­தல்­கா­ரர்கள் வர்த்­த­க­ரான ரியாஸை அழைத்த இடங்கள், பிள்­ளையை விடு­வித்த இடங்கள் என்­ப­வற்­றுக்குச் சென்று சோத­னை­களை நடாத்­தி­ய­துடன், வவு­னியா பொலிஸ் நிலை­யத்தின் பொறுப்­ப­தி­காரி, குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி ஆகியோர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர்.

அதை­ய­டுத்து சந்­தேக நபரை கடந்த 13 ஆம் திகதி வவு­னியாப் பொலிஸார் கைது செய்து நீதி­மன்­றத்தின் உத்தரவின் பேரில் விளக்­க­ம­றி­யலில் வைத்து மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

அது­மட்­டு­மின்றி குறித்த சந்­தேக நபர் வவு­னியா பகு­தி­யி­லுள்ள சமுர்த்தி அபி­வி­ருத்தி வங்­கி­யொன்றில் பணி புரிந்­தவர் என்­பதும், சமுர்த்தி வங்­கியில் காணப்­பட்ட முக்­கிய சேமிப்புத் தொடர்­பான ஆவ­ணங்­களை தீக்கிரையாக்கி அழித்­தமை தொடர்­பான குற்­றச்­சாட்டின் பேரில் பதவி நீக்கம் செய்­யப்­பட்­டவர் என்­பதும் விசாரணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கின்­றது.

எனவே, கடந்த சில மாதங்­க­ளா­கவே சிறுவர், சிறு­மி­யர்­களைக் கடத்தும் சம்­ப­வங்கள் அதி­க­ரித்து வரு­வ­தாகப் பொலிஸ் புள்ளி விப­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த வாரமும் ‘குற்றம்’ பகு­தியில் 7 வயதுச் சிறுமி கடத்­தப்­பட்டு பின் பாது­காப்­பாக மீட்­கப்­பட்ட சம்­பவம் பற்றி நாம் குறிப்­பிட்­டி­ருந்தோம்.

இவ்­வாறு கப்பம் பெறு­வ­தற்­கா­கவும், பாலியல் இச்­சை­களைத் தீர்த்துக் கொள்­வ­தற்­கா­கவும் சிறுவர், சிறு­மியர் கடத்­தப்­படும் சம்­ப­வங்கள் தொடர்ந்து இடம்­பெ­று­வது நாளைய எதிர்­கா­லத்­தையே கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது.

எனவே, பெற்றோர், தமது பிள்­ளைகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். பாட­சா­லைக்குச் செல்லும் போதும் பாட­சா­லை­யி­லி­ருந்து வரும் போதும் பிள்­ளைகள் தனித்துச் செல்­வதை முடி­யு­மான அளவு தவிர்த்துக் கொள்ள வேண்டும். அல்­லது தகுந்த பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

(2015.06.18 திகதி வரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில்)

Share.
Leave A Reply