சென்னையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 84 வயது மூதாட்டி உள்பட 3 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் 84 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் குணமடைந்துள்ளனர்

கொரோனாவில் இருந்து குணமடைந்த 84 வயது மூதாட்டி, 54 வயது பெண், 25 வயது இளைஞர் ஆகியோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

Share.
Leave A Reply