கைகளை கழுவ போதுமான தண்ணீர் இல்லாததால் அரபு பிராந்தியத்தில் சுமார் 7.4 கோடி மக்கள் கொரோனா தொற்று ஏற்படும் அபாயத்தில் இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

மேலும் அங்கு 8.4 கோடி மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் வசதிகூட வீடுகளில் இல்லை என்பதால் அவர்கள் பொதுவான நீர் ஆதாரத்தில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனாலும் இந்த பெருந்தொற்று பரவும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply