யாழ். மிருசுவிலில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்றிரவு (03) 7.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த 40 வயதான ஒருவர் உயிரிழந்தார்.
படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரிய வருவதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

