தமிழ்நாட்டில் அஞ்சத்தக்க அளவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 4829ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் ஒரே நாளில் 324 பேருக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது.
இன்று 31 பேர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். ஆகவே குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1516ஆக உள்ளது.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 3,275ஆக உள்ளது.