பைக் ரேஸரான அஜித், ஒரு டிரிப்பின் போது ஏழை ரசிகரின் வேண்டுகோளுக்கிணங்க அவரது குடிசை வீட்டில் தேநீர் அருந்தியுள்ளார்.
நடிகர் அஜித் மே 1-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறினர்.
அந்தவகையில் நடிகரும், அஜித்தின் நண்பரும், புரோ கபடி நிகழ்ச்சி தொகுப்பாளருமான சுஹேல் சந்தோக், அஜித்துடனான சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு வீரம் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அஜித்தும், சுஹேலும் 500 கிலோமீட்டர் பைக் டிரிப் சென்றுள்ளனர்.
அப்போது டீ குடிப்பதற்காக ஓர் இடத்தில் நிறுத்தியுள்ளனர். அந்த சமயத்தில் அருகில் வசித்த குடும்பத்தினர் அஜித்தை தங்கள் குடிசை வீட்டுக்கு அழைத்து டீ போட்டு கொடுத்துள்ளனர்.
Here’s wishing a friend, an inspiration & a truly kind hearted #Thala #Ajith a very Happy Birthday!
To good health always…Keep smiling! #HBDThalaAJITH #HBDDearestThaIaAJITH
I will try & put up an unseen picture later from one of our rides together that you all might enjoy! pic.twitter.com/zs0469EsTw
— Suhail Chandhok (@suhailchandhok) May 1, 2020
As promised, lovely moment on one of our rides. We stopped for tea & this family asked us to have tea in their hut & were too shy to ask for a picture. So #Thala #Ajith asked them himself, I clicked the picture & he then had it printed and sent to them!???#HBDDearestThalaAJITH pic.twitter.com/4kVGg4YfzP
— Suhail Chandhok (@suhailchandhok) May 1, 2020
அவர்கள் அஜித்துடன் புகைப்படம் எடுப்பதற்காக கேட்க வெட்கப்பட்டு தயங்கி நின்றுள்ளனர். இதை அறிந்த அஜித் அவர்களை அழைத்து புகைப்படம் எடுத்தது மட்டுமல்லாது.
அந்த புகைப்படத்தை பிரிண்ட் போட்டு அனுப்பியும் வைத்ததாக சுஹேல் தெரிவித்துள்ளார். சுஹேல் சந்தோக், வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.