பொது முடக்க நிலை உள்ளிட்ட கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இலங்கையில் மது அருந்தும் பழக்கம் 80 % விழுக்காடும், புகை பிடிக்கும் பழக்கம் 68 % விழுக்காடும் குறைந்துள்ளதாக அந்நாட்டின் மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையம் நடத்திய சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளது.
ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 54 % விழுக்காட்டினர் மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது அருந்தவில்லை என்றும், 14 % விழுக்காட்டினர் காவல்துறையினரின் சோதனை காரணமாக மது அருந்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் 17 % விழுக்காட்டினர், ஊடரங்கு காலகட்டத்தில் தங்களுக்கு மது அருந்தும் எண்ணமே வரவில்லை என தெரிவித்துள்ளனர்.
புகைப்பழக்கத்தை பொறுத்தவரை, 48 % விழுக்காட்டினர் புகைப்பதை குறைத்துள்ளதாகவும், 20 % விழுக்காட்டினர் புகைப்பழக்கத்தை நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் மீண்டும் மதுபான கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, மதுபானங்கள் வாங்க அங்கு பெருந்திரளானோர் கூடியுள்ளனர். மேலும் அவர்கள் தனிநபர் இடைவெளி உள்ளிட்ட எந்த கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்கவில்லை.