இலங்கையில் இன்று (23) இதுவரை 17 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,085 ஆக உயர்ந்துள்ளது.
கண்டறியப்பட்டவர்களில் 10 பேர் கடற்படையினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 416 ஆக காணப்படுகிறது.
இதேவேளை இதுவரை 660 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.