இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு அதிகமான காலம் முடக்கப்பட்ட நாடு இன்று முழுமையாக திறக்கப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி நாடு முடக்கப்பட்டது. இந்த நிலையில் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்கள் கடந்த வாரம் முழுமையாக திறக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, கொழும்பு, கம்பஹா உள்ளடங்களாக அனைத்து மாவட்டங்களும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. பல்வேறு சுகாதார நடைமுறைகளின் பிரகாரம், கடும் கட்டுபாடுகளுக்கு மத்தியில் நாடு முழுமையாக திறக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை கடைபிடிக்காத அனைவரையும் இன்று முதல் கைது செய்வதற்கான அதிகாரத்தை சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் போலீஸாருக்கு வழங்கியுள்ளார்.

Share.
Leave A Reply