நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் இறுதிக் கிரியைகளை இடர் முகாமைத்துவ அமைச்சின் செலவில் முன்னெடுக்குமாறு, சுகாதார தரப்பினருக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷ பணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய , சவப்பெட்டிகளையும் இலவசமாக வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், இனம், மதம் பேதமின்றி சகலருக்கும் அரச செலவில் இறுதிக் கிரியைகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளாரென, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

