இலங்கையில் நிதி அமைச்சராக பதவியேற்று அலி சப்ரி 24 மணி நேரத்தில் பதவி விலகியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்ற சூழலில், பிரதமர் தவிர்த்த அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்பு நேற்று , நிதி அமைச்சராக அலி சப்ரி, கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சராக ஜி.எல்.பீரிஸ், நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகிய நான்கு அமைச்சர்கள் நேற்று பதவிகளை ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply