நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (26) விடுதலையானார்.
அவருக்கு, வரும் காலத்தில், நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் எந்தவொரு கருத்தை தெரிவிக்கவோ செயற்படவோ கூடாது என்ற நிபந்தனையுடன் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெலிக்கடை சிறைச்சாலைக்கு வெளியே விடுதலையான ரஞ்சன் ராமநாயக்கவை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் வரவேற்றனர்.
விடுதலையான பின்னர் முதன்முறையாக செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சன்,
மன்னிப்பு நிபந்தனைகளை மீறினால், இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை மீண்டும் நடைமுறைக்கு வரும், அதாவது மேலும் ஐந்து ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
நான் முன்பு போல் பேச விரும்புகிறேன், ஆனால் என்னால் முடியாது, என்று அவர் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், தம்மை விடுதலை செய்வதற்கும், அதற்காக செயற்பட்டவர்களுக்கும் இதன்போது நன்றி தெரிவித்தார்.
எனக்கு ஒரு பாயும், பின்னர் தரையில் தூங்க வேண்டிய கட்டாயத்தில் ஒரு மெத்தையும் வழங்க எதிர்க்கட்சித் தலைவர்தான் நடவடிக்கை எடுத்தார். உயர் கல்வியைத் தொடர என்னை அங்குனுகொலபெலஸ்ஸவிலிருந்து கொழும்புக்கு மாற்றுவதற்கு அவர் உழைத்தார்,” என்று கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வழிகாட்டலுடன் ஜெனிவாவுக்கு தனது வழக்கை எடுத்துச் சென்ற அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
ரஞ்சன் ராமநாயக்க தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாகவும், பக்கம் மாறப்போவதாகவும் கூறப்படுவதை நிராகரித்தார். (R)