மினுவாங்கொடை – கமன்கெதர பகுதியில் கடந்த ஆறாம் திகதி இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முக்கொலைக்கான துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், குறித்த நபர் தனது வசிப்பிடத்திலிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளர்.

இந்நிலையில், சந்தேக நபரைக் கைதுசெய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தேக நபரின் முழுமையான விபரங்களை பொலிஸார் வெளியிட்டு ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் சந்தேக நபரின் விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

பெயர் – ஜயகொடகே சஞ்சீவ தோன சஞ்ஜீவ லக்மால்

வயது – 39

தேசிய அடையாள அட்டை இலக்கம் – 833214292V

முகவரி – இலக்கம் 10 மகிந்தாராம வீதி ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை

இந்நிலையில், குறித்த சந்தேக நபரை எவரேனும் எந்தப் பகுதிகளிலும் அடையாளம் காண்டால், சிரேஷ்ட்ட பொலிஸ் அத்தியட்சகர் – கம்பஹா – 071 85 91 608, உதவி பொலிஸ் அதிகாரி – கம்பஹா – 071 85 91 610, மினுவாங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – 071 85 91 612 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share.
Leave A Reply