நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டை முன்னிட்டு, டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களில்ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமானத்தில் புறப்பட்டார். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக டெல்லியில் 1 லட்சத்து 30 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு தலைவர்களுக்கு தங்கம், வெள்ளித்தட்டில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாத்திரங்களில், உணவு பரிமாறப்பட உள்ளது.ஜி20 மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் வெளிநாட்டு பிரதிநிதிகள், தலைவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதி கலைஞர்களை கொண்டு நடன நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, வெளிநாட்டினரை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஜி20 மாநாட்டையொட்டி Jama மசூதி வண்ண மின் விளக்குகள் மற்றும் பல வண்ண குடைகள், மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வெளி நாட்டு பிரதிநிதிகள் தங்கும் தாஜ் நட்சத்திர விடுதி மூவர்ண நிறத்தில் ஜொலிக்கும் வகையில், அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

 

Share.
Leave A Reply