– வருடாந்தம் சம்பள உயர்வை இரட்டிப்பாக்க பரிந்துரை

அலுவலக உதவியாளர்களுக்கு தரநிலை அடிப்படையில் ரூ. 5,450 – 13,980 வரையில் சம்பள அதிகரிப்பு.

-சாரதிகளுக்கு 6960 – 16,340 வரையில் சம்பள அதிகரிப்பு

-சமூர்த்தி/அபிவிருத்தி/விவசாய ஆய்வு அதிகாரிகளுக்கு ரூ. 8,340-15,685 வரையில் சம்பள அதிகரிப்பு

-முகாமைத்துவ உதவியாளர்களுக்கு ரூ. 12,710 – 17,550 வரையில் சம்பள அதிகரிப்பு
-அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ரூ. 12,710 – 25,150 வரையில் சம்பள அதிகரிப்ப
-பொது சுகாதார பரிசோதகர்/குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களுக்கு ரூ. 12,558 -25,275 வரையில் சம்பள அதிகரிப்பு
-கதிரியக்கவியல்/ மருந்தாளர்களுக்கு ரூ. 13,280 – 25,720 வரையில் சம்பள அதிகரிப்பு
-தாதியர்களுக்கு ரூ. 13,725 – 26,165 வரையில் சம்பள அதிகரிப்பு
-அதிபர்களுக்கு ரூ. 23,245 – 39,595 சம்பள அதிகரிப்பு
-ஆசியர்களுக்கு ரூ. 17,480 – 38,020 சம்பள அதிகரிப்பு

-பொலிஸ் அதிகாரிகளுக்கு ரூ. 10,740 – 23,685 சம்பள அதிகரிப்பு
-கிராம சேவகர்களுக்கு ரூ. 11,340 – 23,575 வரையில் சம்பள அதிகரிப்பு
-நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு ரூ. 28,885 சம்பள அதிகரிப்பு
-பிரதிப் பணிப்பாளர்/பிரதி ஆணையாளர்களுக்கு ரூ. 43,865 சம்பள அதிகரிப்பு
-பிரதேச செயலாளர்/பணிப்பாளர்/ஆணையாளர்/சிரேஷ்ட உதவிச் செயலாளர் —பதவிகளுக்கு ரூ. 57,545 சம்பள அதிகரிப்பு
-வைத்திய அதிகாரிகளுக்கு ரூ. 35,560 – 53,075 சம்பள அதிகரிப்பு

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய.ஆர்.செனவிரத்ன தலைமையிலான நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி 2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 24 – 50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படவுள்ளது.

Share.
Leave A Reply