“அகமதாபாத்:அகமதாபாத்தில் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவர்கள் முன்னிலையில் ஒரு மாணவனை ஈவிரக்கமின்றி தாக்கும் வீடியோ வைரலானதை அடுத்து, அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்வாவில் உள்ள தனியார் பள்ளியில் கணிதம் கற்பித்து வந்த அபிஷேக் படேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

வைரலாகும் வீடியோவில், மாணவர்கள் அனைவரும் அமர்ந்திருக்கு, ஆத்திரத்தில் வரும் கணித ஆசிரியர் ஒரு மாணவனின் கையை முறுக்கி, தலைமுடியை பிடித்து இழுத்து வந்து மாணவர்கள் முன்பு நிறுத்தி கன்னத்தில் பலமுறை அறையும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றுள்ளது. வகுப்பறையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை காண்போரை கதிகலங்க வைத்துள்ளது.

வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி, பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு ஆசிரியரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து போலீசார் படேலை கைது செய்து அவர் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply