கேரளாவில் பள்ளிக்கு செல்போன் கொண்டு வரக்கூடாது என கூறியதற்காக, பள்ளி முதல்வர் முன்னிலையில் ஆசிரியரை கொலை செய்து விடுவேன் என பிளஸ் 1 மாணவர் மிரட்டியதாக, தினத்தந்தி செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

கேரளாவின் பாலக்காட்டில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில், செல்போன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பள்ளியில் செல்போன் கொண்டு போன பிளஸ் 1 மாணவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த ஆசிரியர் அதனை பள்ளி முதல்வரிடம் தெரிவித்து உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் அறைக்கு வரும்படி மாணவருக்கு அறிவுறுத்தப்பட்டது. பள்ளி முதல்வர், அந்த மாணவனிடம் “செல்போன் வேண்டுமென்றால் பெற்றோரை அழைத்து வா” என கூறியதாக அச்செய்தியில் உள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர் முதல்வரை நோக்கி கத்தி கூச்சலிட்டதாகவும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த மாணவர், ஒரு கட்டத்தில் ஆசிரியரை கொலை செய்து விடுவேன் என்றும் எச்சரித்ததாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மாணவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என, பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மாணவருக்கு ஆலோசனை வழங்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அந்த மாணவரும் பள்ளி அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளதாக அச்செய்தி கூறுகிறது.

Share.
Leave A Reply