அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு புதிய வர்த்தகப் போர் அச்சத்துக்கு மத்தியில் தங்கத்தின் விலையானது வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.

சீனப் பொருட்கள் மீதான புதிய அமெரிக்க வரிகளுக்கு பதிலடியாக பீஜிங் அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை விதித்ததை அடுத்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, ஸ்பாட் தங்கம் 02.53 GMT மணியளவில் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.2 சதவீதம் உயர்ந்து 2,848.69 அமெரிக்க டொலர்களாக இருந்தது.

முந்தைய நாள் அமர்வில் 2,853.97 அமெரிக்க டொலர்களை எட்டிய பின்னர் தங்கத்தின் விலையானது புதனன்று உச்சத்தை அடைந்தது.

அதேநேரம், அமெரிக்க தங்க எதிர்காலம் 0.2 சதவீதம் அதிகரித்து 2,879.70 டொலர்களாக இருந்தது.

உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் பதட்டத்தைத் தணிக்க சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தை இந்த வாரம் இடம்பெறாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

சீனா, அமெரிக்க இறக்குமதிகள் மீது புதிய வரிகளை விதித்தது மற்றும் ட்ரம்பின் கட்டணங்களுக்கான பதிலில் சாத்தியமான தடைகளுக்கு கூகுள் உட்பட பல நிறுவனங்களை பட்டியலிட்டது.

இவ்வாறான பின்னணியில் இரு நாகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்தால் தங்கத்தின் விலையானது 3,000 அமெரிக்க டொலர்களை விஞ்சியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மூன்று பெடரல் ரிசர்வ் அதிகாரிகள் ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக கட்டணங்களுக்கான திட்டங்கள் பணவீக்க அபாயங்களை முன்வைக்கின்றன என்று எச்சரித்தனர்.

இதனிடையே புதனன்று ஸ்பாட் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 0.5% உயர்ந்து $32.26 ஆகவும், பிளாட்டினம் 0.8% அதிகரித்து $970.95 ஆகவும் இருந்தது.

இந்த வில‍ை உயர்வுக்கு அமைவாக இலங்கையிலும் தங்கத்தின் விலையானது இன்றைய தினம் உச்சத்தை அடைந்துள்ளது.

Share.
Leave A Reply