யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற 15 வயது மதிக்கத்தக்க சிறுவனை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் திங்கட்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply