ஹமாஸ் அமைப்பு தன்னிடம் பணயக்கைதிகளாகயிருந்தவேளை உயிரிழந்த நான்கு இஸ்ரேலியர்களின் உடல்களை செஞ்சிலுவை சங்கத்திடம் கையளித்துள்ளது.
உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் கையளித்துள்ளமை இதுவே முதல்தடவை.
செஞ்சிலுவை சங்கம் தற்போது அந்த உடல்களை இஸ்ரேலை நோக்கி கொண்டு செல்கின்றது.
உயிரிழந்தவர்களில் Bibas குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் அடங்குவர். இவர்களின் நிலை இஸ்ரேலில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.