யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் நேற்று திங்கட்கிழமை (24) இரவு இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு வைத்தியசாலைக்கு முன்பாக உழவு இயந்திரம் ஒன்று தடம் புரண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் உழவு இயந்திரத்தை செலுத்தி சென்ற இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply