யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இருந்து கைதடி நோக்கி செல்லும் வீதியில் கடந்த 21ஆம் திகதி விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் ஒன்று இன்று புதன்கிழமை (26) கோப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கைதடி – தச்சன்தோப்பு பகுதியில் குறித்த வாகனம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 21ஆம் திகதி மரணச் சடங்கின் இறுதி ஊர்வலத்தில் ஈடுபட்டவர்களை இந்த வாகனம் மோதியதில் அறுவர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து வாகனத்தின் உரிமையாளர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.

மேலும், வாகனத்தின் உரிமையாளர் கொழும்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply