கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை இந்திராபுரம் A9 வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிளை வேன் ஒன்று மோதித் தள்ளியுள்ளது.  மூவர் காயம் அடைந்துள்ளனர்.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு ஆண்களும், ஒரு யுவதியும் காயமடைந்து பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து கிளிநொச்சி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பளை போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply