மியன்மாரில்இன்று மதியம் 12.38 மணி அளவில் மீண்டும் 5.1 ரிச்டர் அளவிலான பூகம்பம்ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பேரழிவு தரும் பூகம்பத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர்ச்சியான பூகம்பங்களில் இதுவும் ஒன்றாகும். மியன்மாரில் மீண்டும் 3வது நாளாக பூகம்பம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

பூகம்பத்தை தொடர்ந்து மண்டலேயின் வீதிகளில் இருந்த மக்கள் அலறினர். முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை மியன்மாரில் ஏற்பட்ட 7.7 ரிச்டர் அளவிலான பூகம்பத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் உட்கட்டமைப்புகள் சேதமடைந்தன.

மியன்மாரில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதுவரை, 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும். 3,400 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பூகம்பத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply