நடிகர் ரவி மோகனுக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என அவரது மனைவி ஆர்த்தி மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நடிகர் ரவி மோகன் ஜீவனாம்சம் தர வேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் அவரது மனைவி ஆர்த்தி மனு தாக்கல் செய்துள்ளார்.
விவாகரத்து வழக்கில் நடிகர் ரவி மோகனும், அவரது மனைவி ஆர்த்தியும் குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.
அப்போது சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆர்த்தியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என ரவி மோகன் மனு தாக்கல் செய்தார். ஏன் விவாகரத்து வேண்டும் என்பதற்கான ரவி மோகனின் விளக்கங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
.அதேபோன்று, ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ரவி மோகன் மாதம் 40 லட்ச ரூபாய் தனதுக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 12-ஆம் தேதிக்கு சென்னை 3-வது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி ஒத்திவைத்தார்.
முன்னதாக ரவி மோகனும் தானும் பிரிவதற்கு 3-வது நபரே காரணம் என ஆர்த்தி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், உரிய உத்தரவு வரும் வரை அவரது மனைவியாகவே தன்னை அடையாளப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.