அவரின் முன்னோடிகள் அனைவரையும் போலவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், பிராந்தியத்தை ஸ்திரமின்மைக்கு பங்கம் ஏற்படுத்தும் இஸ்ரேலின் கொடிய திட்டங்களை செயல்படுத்த, யூத சியோனிச அமெரிக்க கோடீஸ்வரர்களால் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டார்.
அவரின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவில் உள்ள அனைவரும் காஸாவில் பலஸ்தீனர்களின் இனப்படுகொலைக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் முழுக்க முழுக்க சியோனிச சார்பு மதவெறி கொண்டவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு முற்றிலும் எதிரானவர்கள்.
பதவியேற்ற ஒரு வாரத்திற்குள் ட்ரம்ப் செய்த முதல் காரியங்களில் ஒன்று பலஸ்தீனர்களை இன ரீதியாக ஒழித்துக் கட்டல் மற்றும் காஸாவை மத்திய கிழக்கின் ஆடம்பர கரையோர (ரிவியரா) என்று அவர் விவரித்தமை என்பனவாகும்.
‘இனப்படுகொலை பைடன்’ என்று அழைக்கப்படும் தனது முன்னோடி ஜோ பைடனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி பலஸ்தீனர்களுக்கு எதிராக 20 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனப்படுகொலைக்கு ஆதரவு மற்றும் காஸாவில் எஞ்சியிருப்பதை அழிக்க, ட்ரம்ப் மிகவும் அழிவுகரமான ஆயுதங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றார்.
2025 மார்ச் 18 ஆம் திகதி புனித ரமழான் மாதத்தில் போர்நிறுத்தத்தை மீறிய விடயத்திலும் 600 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்களைக் கொன்ற விடயத்திலும் போர்க் குற்றவாளி நெதன்யாஹுவுடன் ட்ரம்ப் இணைந்திருந்தார்.
அமெரிக்காவின் கண்மூடித்தனமான ஆதரவுடன் தான் போர்க் குற்றவாளி நெதன்யாஹு தொடர்ந்து பலஸ்தீனர்களை படுகொலை செய்து அவர்களின் நிலங்களை கைப்பற்றி வருகின்றார்.
மேலும் சுமார் 2.3 மில்லியன் பலஸ்தீனர்களை மோசமான காட்டுமிராண்டித்தனம் மற்றும் துன்பங்களுக்கு ஆளாக்குகின்றார்.
தண்ணீர் உணவு மருந்து மற்றும் உறைவிடம் ஆகியவற்றையும் தடுத்துள்ளார்.
இவற்றின் இறுதி இலக்கு பலஸ்தீனர்களை வெளியேற்றி காஸா மற்றும் மேற்குக் கரையைக் கைப்பற்றி முழு மத்திய கிழக்கையும் ஆபிரிக்காவின் வடக்கையும் அரபு முட்டாள்களை ஆட்சியாளர்களாக கொண்டு கட்டுப்படுத்தும் ஒரு அகண்ட இஸ்ரேலை உருவாக்குவதாகும்.
உலக அளவில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களை அழிக்கத் தீர்மானித்துள்ள அமெரிக்க அதிபரை மரியாதையும் கண்ணியமும் கொண்ட எந்த முஸ்லிமும் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள்.

இவ்வாறான பின்னணி சூழ்நிலைகளில் தான் சர்வாதிகாரிகளால் ஆளப்படுகின்ற மூன்று செல்வந்த அரபு நாடுகளான- சவூதி அரேபியா, கட்டார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பன ட்ரம்பை வரவேற்க ஊதா மற்றும் சிவப்பு நிற கம்பளங்களை விரித்தன.
இஸ்ரேல் தொடர்ந்து அமெரிக்க ஆயுதங்களினதும் மற்றும் அமெரிக்க நேரடி ஆதரவுடனும் பலஸ்தீனர்களை படுகொலை செய்து வரும் நிலையில், ட்ரம்பை வரவேற்க அவர்கள் ஆயிரக்கணக்கான மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளனர்.
இஸ்லாத்தின் பூமியான சவூதி அரேபியாவில் ட்ரம்ப் வந்திறங்கிய போது மரபுகளை மீறி, சவூதியின் மேலதிக எவ்.15 விமானங்களின் அணிவகுப்புடன் அவர் வரவேற்கப்பட்டார். 600 பில்லியன் டொலர் மதிப்புள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் இங்கு அறிவிக்கப்பட்டன. 142 பில்லியன் டொலர் ஆயுத விற்பனை ஒப்பந்தமும் இதில் அடங்கும்.
சவூதி அரேபியாவில், சிரியா நாட்டின் இன்றைய அதிபர் அல்-ஷாராவை ட்ரம்ப் சந்தித்தார். சிரியாவின் புதிய அரசாங்கம் மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாகவும். அல்-ஷாராவின் தலைக்கு ஏற்கெனவே ட்ரம்ப் விதித்திருந்த 10 மில்லியன் டொலர் பரிசை நீக்குவதாகவும் இந்த சந்திப்பின் போது அறிவித்தார்.
கட்டார் 400 மில்லியன் டொலர் மதிப்புள்ள சொகுசு விமானத்தை ட்ரம்பிற்கு வழங்கியது. அமெரிக்காவில் தயாரிக்கப்படும் 210 போயிங் 787 ட்ரீம்லைனர் மற்றும் 777 எக்ஸ் வரை 96 பில்லியன் டொலர்பெறுமதியான விமானங்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தங்களிலும் கட்டார் கையெழுத்திட்டது. இது வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தமாகும். சிக்கலில் உள்ள அமெரிக்க ஜெட் விமானங்களின் உற்பத்தியாளர்களுக்கு மிகவும் தேவையான ஒரு உயிர் காப்பாளரை இதன் மூலம் ட்ரம்ப் அறிமுகம் செய்துள்ளார்.
ட்ரம்ப், கட்டாரில் பல பில்லியன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டபோது, அவரது கூட்டாளி நெதன்யாஹு மே 15 அன்று காஸாவில் 127 பலஸ்தீனர்களை படுகொலை செய்ய அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தினார்.
அடுத்த பத்தாண்டுகளில் அமெரிக்காவில் 1.4 பில்லியன் டொலர் முதலீடு செய்யப் போவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்தது.
வளைகுடாவின் ஆட்சிகள் அதிகாரத்தையும் செல்வத்தையும் கொண்டுள்ளன. இது ட்ரம்ப்புக்கு நன்கு தெரியும்.
இவை அவர்களின் பயன்படுத்தப்படாத செல்வம் என்பதையும் அவர் நன்கு அறிவார். படுகொலைகளை நிறுத்தவோ முற்றுகையைத் தணிக்கவோ அல்லது தங்களது கண்ணியத்தையோ அவர்கள் கோரவும் இல்லை.
அவர்களது செல்வத்துக்கும் முரண்பாடுகளுக்கும் ஈடாக ட்ரம்ப், இஸ்ரேலுக்கு தேவையான அளவு குண்டுளை வழங்கி, பிராந்தியத்தில் அது எங்கு வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற நிலயை ஏற்படுத்தி சென்றுள்ளார். இது தான் யதார்த்தம்.
ட்ரம்ப் மீண்டும் பதவிக்கு வந்ததில் ஒரு மையப் புள்ளியாக அவர் தனது முதல் ஜனாதிபதி பதவி காலத்தில் தொடங்கி நிறைவேற்றத் தவறிய ஒரு திட்டம் உள்ளது. பலஸ்தீனை அழித்தல், அந்தப் பிராந்தியத்தில் சர்வாதிகாரத்தை உயர்த்துதல் மற்றும் மத்திய கிழக்கை இஸ்ரேலின் மறுவடிவமைப்பாக மாற்றல் என்பனவே அவையாகும்
ட்ரம்பைப் பொறுத்தவரை மத்திய கிழக்கு என்பது தொன்மையான நீண்ட வரலாறுகளையும், கலாசாரங்ளையும், பாரம்பரியங்களையும், மனிதநேயங்களையும் உள்ளடக்கிய ஒரு பிரதேசம் அல்ல. அது ஒரு சந்தை. ஆயுதங்களின் கிடங்கு. புவிசார் அரசியலின் ஏ.ரி.எம். இயந்திரம்.
உலகத்தைப் பற்றிய அவரது பார்வை சுவிசேஷ ஆர்வத்தின் மற்றும் பரிவர்த்தனை உள்ளுணர்வின போலியான வெளிப்பாடு. அவர் கையாளும் பகுத்தறிவற்றவர்கள், வன்முறையாளர்கள், கட்டுப்படுத்த வேண்டியவர்கள் போன்ற சொல்லாட்சியில் அரேபியர்கள் குழப்பம் நிறைந்தவர்கள்.
இஸ்ரேல் மட்டுமே நாகரீகமான ஜனநாயகமான மற்றும் தெய்வீகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தேசமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு தற்செயலானது அல்ல. அது ஒரு சித்தாந்தம்.
வளைகுடா வழியாக ஒரு வியாபாரம் மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால், அது காஸாவில் நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அல்ல. ட்ரம்பின் ஆதரவைப் பெறுவதற்காக யார் அதிகம் செலவிட முடியும் என்ற போட்டியே அது.
புதிய ஒழுங்கு முறை என்பது இஸ்ரேலுடன் இயல்பாக்கம் அதன் மேலாதிக்கத்திற்கு அடிபணிதல் மற்றும் பலஸ்தீனம் மீதான மௌனம் ஆகியவற்றைக் கோருகிறது.
இதற்கு ஈடாக ட்ரம்ப் தண்டனையிலிருந்து விடுபடும் விடுபாட்டு உரிமை என்ற பூரண சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்குகிறார்.
அரசியல் பாதுகாப்பு மற்றும் ஆயுதங்கள் உட்பட. அந்த விடுபாட்டு உரிமை என்பது தங்கத்தால் வாங்கப்பட்டு அரபு இரத்தத்தில் ஊறவைக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியின் மூலம் உருவான கோட்பாடாகும்.
இது இரட்டிப்பாகும். இதற்காக அவர்கள் கோடிக் கணக்கான ஒப்பந்தங்கள் கௌரவங்களை வழங்கல் மற்றும் பில்லியன்களை வழங்குகிறார்கள். அடிபணிதல் தங்களுக்கு மரியாதையை வழங்குவதாக அவர்கள் நம்புகின்றார்கள். ஆனால், ட்ரம்ப் அதிகாரத்தை மட்டுமே மதிக்கிறார்- அதில் அவர் தெளிவாகவும் இருக்கின்றார்.
துபாயில் ஒரு ஹோட்டல், ஜெத்தாவில் ஒரு வர்த்தக கோபுரம், கத்தாரில் ஒரு கோல்ஃப் ரிஷோர்ட், அமெரிக்காவில் உள்ள கிரிப்டோகரன்ஸி நிறுவனங்கள் வளைகுடாவின் உயரடுக்கினருக்கான வொஷிங்டனில் ஒரு தனியார் கிளப்… இவை வெறுமனே மூலோபாய திட்டங்கள் அல்ல. மாறாக அவை ட்ரம்ப் குடும்பத்தின் எதிர்கால வருமானத்துக்கான அத்திவாரங்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு அரபு ஆட்சியாளர்கள் ஏன் வெகுமதி அளிக்கிறார்கள்? இனப்படுகொலைக்காக காஸாவில் சுமார் 100,000 தொன் குண்டுகள் வீசப்பட்டன.
முழு உலகும் சாட்சியாக இருக்கும் வகையில் இன ஒழிப்புக்கு ஆதரவளித்தது அமெரிக்கா. காஸாவின் மக்கள் தொகையை குறைக்கக் தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அரசியல்வாதிகளுக்கு அதிகாரம் அளித்தது. மற்றும் அமெரிக்க வரலாற்றில் மிகவும் வெறித்தனமான சியோனிச மற்றும் மிகவும் வெறுக்கத்தக்க இஸ்லாமோபோபியா நிர்வாகத்திற்கு தலைமை தாங்கி வருகின்றார் ட்ரம்ப்.
எல்லாவற்றையும் வழங்கிக்கொண்டு, தங்களுக்கு தேவையானதை இதுவரை அரபு ஆட்சியாளர்கள் ட்ரம்ப்பிடம் கோரவில்லை.
காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையை நிறுத்த அரபுலக ஆட்சியாளர்கள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தியிருக்கலாம். கட்டாரின் ஷேக் ஹமாத் மட்டுமே காஸாவில் இனப்படுகொலையை நிறுத்துமாறு ட்ரம்பை வலியுறுத்தினார். எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதியும் அழுத்தத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால், காஸா விடயத்தில் மட்டும் எல்லோருமே மௌனம்.
-லத்தீப் பாரூக்-