புவிசார் அர­சி­யலில் நாடுகள் தனித்து நிற்­பதும், தமது இறைமை மற்றும் சுயா­தி­பத்­தி­யத்தை பாது­காத்துக் கொள்­வதும் சவா­லா­ன­தா­கவே மாறி இருக்­கி­றது.

கனடா போன்ற நாடு­களின் நிலையே இவ்­வா­றான அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­கி­யுள்ள நிலையில், இலங்கை போன்ற சிறிய நாடு­களின் நிலை எப்­ப­டி­யி­ருக்கும் என ஊகிப்­பது கடி­ன­மல்ல.

அதிலும், அணி­சேரா கொள்கை நிலைப்­பா­டு­களைக் கொண்ட நாடுகள் மத்­தியில் இது ஒரு சிக்­க­லான சூழ­லாகும்.

இலங்கை அணி­சேராக் கொள்­கையை பின்­பற்­று­கின்ற ஒரு நாடாக இருந்­தாலும், வெளிப்­ப­டை­யாக அதைக் கூறு­கின்ற அள­விற்கு கொள்கை ரீதி­யாக அதன் செயற்­பா­டுகள் இருப்­ப­தில்லை.

அமெ­ரிக்க – சீன முரண்­பாட்­டிலும் சரி, அமெ­ரிக்க – ரஷ்ய முரண்­பாட்­டிலும் சரி, இந்­திய – பாகிஸ்தான் மோத­லிலும் சரி, ரஷ்ய – உக்ரேன் மோதல்­க­ளிலும் சரி, இஸ்ரேல் – பலஸ்­தீன மோதல்­க­ளிலும் சரி, இலங்கை நடு­நிலைப் போக்கில் தான் செயற்­பட்­டது என்று கூற முடி­யாது.

அண்­மையில் இஸ்ரேல் குறித்து பாரா­ளு­மன்­றத்தில் கேள்­விகள் எழுப்­பப்­பட்ட போது, அமைச்சர் பிமல் ரத்­நா­யக்க அளித்த பதில் முக்­கி­ய­மா­னது.

பலஸ்­தீ­னர்­களின் போராட்­டத்தை நாங்கள் ஆத­ரிக்­கிறோம், அதே­வேளை, இஸ்­ரே­லுடன் தந்­தி­ரோ­பாய ரீதி­யான உறவை பேணு­கிறோம் என அவர் கூறி­யி­ருந்தார்.

பலஸ்­தீ­னர்­க­ளுக்கு ஆத­ரவு, இஸ்­ரே­லுடன் உறவு என்­பதே இதன் சுருக்கம்.

இதே­போன்ற ஒரு கருத்து, இந்­திய –-சீன முரண்­பா­டு­களின் போதும் இலங்கை அர­சாங்­கத்­தினால் முன்னர் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்­தி­யாவை நெருங்­கிய உற­வினர் என்றும் சீனாவை நெருங்­கிய நண்பர் என்றும் முன்­னைய ஆட்­சி­யா­ளர்கள் வெளிப்­ப­டுத்­திய கருத்­துக்கள் இத்­த­ரு­ணத்தில் நினைவில் கொள்­ளப்­பட வேண்­டி­யவை.

இங்கு உற­வுக்­கா­ர­ருக்கும், நண்­ப­ருக்கும் என்ன வித்­தி­யாசம்? அது எந்த அள­வு­கோலால் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கி­றது? என்ற கேள்­விக்கு யாரி­டமும் பதில் கிடை­யாது.

அது­போ­லத்தான் பலஸ்­தீ­னர்­க­ளுக்கு ஆத­ரவை வழங்­கு­வ­தாக கூறிக் கொண்டு, இஸ்­ரே­லுடன் பொரு­ளா­தார உற­வு­களை வைத்துக் கொள்­ளு­கின்ற மூலோ­பா­யத்தை இலங்கை கையா­ளு­கி­றது.

இது ஒரே நேரத்தில், பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழ­னாக இருக்­கின்ற நிலை.

சர்­வ­தேச ரீதி­யாக இலங்கை முக்­கி­ய­மான அமை­வி­டத்தில் இருக்­கின்ற சூழலில், இவ்­வா­றான ஒரு மூலோ­பா­யத்தை கடைப்­பி­டிப்­பது முக்­கி­ய­மா­ன­தென ஆய்­வா­ளர்கள் பலர் கூறு­கின்­றனர்.

இலங்­கையின் மீது பிற நாடுகள் தலை­யீடு செய்­வ­தற்கு பல கார­ணங்கள் இருக்­கின்­றன.

அமெ­ரிக்கா, இந்­தியா, சீனா என ஒவ்­வொரு நாட்டின் தலை­யீட்­டுக்கும் ஒவ்­வொரு விளக்­கங்­களை கொடுக்க முடியும்.

இலங்­கையின் மீதான இந்­தி­யாவின் ஈர்ப்பும் ஆதிக்­கமும் எப்­போதும் மாறாத ஒன்­றா­கவே இருந்து வந்­தி­ருக்­கி­றது.

ஆனால், அது அண்­மைக்­கா­லத்தில் கொள்கை ரீதி­யான பெரும் மாற்­றத்தை சந்­தித்­தி­ருக்­கி­றது.

நீண்­ட­ கா­ல­மாக இலங்கை விவ­கா­ரத்தில் செல்­வாக்குச் செலுத்தி வந்த இந்­தியா, தமிழர் பிரச்­சினை விட­யத்தை, தனது பிரச்­சினை போலவே கையாண்­டது.

ஒரு கட்­டத்தில் தமிழர் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தாக கூறிக் கொண்டு, இலங்கை அர­சுடன் தானே ஒரு ஒப்­பந்­தமும் செய்து கொண்­டது.

அதில், தமி­ழர்கள் தரப்பில் யாரும் கையெ­ழுத்­தி­ட­வில்லை.

தமி­ழர்­களை ஒரு பங்­கா­ளி­யாக இணைக்க இந்­தியா விரும்­ப­வில்லை என்றும், அவர்­களை ஒரு தனித்­த­ரப்­பாக அங்­கீ­க­ரிக்­காமல் தவிர்க்­கவே அவ்­வாறு நடந்து கொண்­டது என்ற விமர்­ச­னங்­களும் உள்­ளன.

ஜே.ஆரும் ராஜீவ்­காந்­தியும் கையெ­ழுத்­திட்ட அந்த ஒப்­பந்தம் மூலம் உரு­வாக்­கப்­பட்­டவை தான், 13 ஆவது திருத்தச் சட்­டமும் மாகாண சபை­களும்.

இன்று இந்த இரண்டும் நடை­முறை ரீதி­யாக செய­லி­ழந்து போயி­ருக்­கின்­றன.

இது நீர்த்­துப்­போன நிலையை அடைந்­தி­ருப்­ப­தற்கு தமிழர் தரப்­புத்தான் காரணம் என்று குற்­றம்­சாட்­டு­ப­வர்­களும் உள்­ளனர்.

தமிழர் பிரச்­சினை விட­யத்தில் இந்­தியா கவனம் செலுத்­திய போது, தீர்­வு­களை முன்­வைத்து செயற்­ப­டுத்த முனைந்த போது, அதற்கு தமிழ்த்தலை­வர்கள் ஒத்­து­ழைக்­க­வில்லை என்றும், அவர்கள் அதனை எதிர்த்­ததே இந்­தி­யாவின் வில­க­லுக்கு காரணம் என்றும் சிலர் குறை­பட்டுக் கொள்­கி­றார்கள்.

இந்த குற்­றச்­சாட்டு முற்­றிலும் சரி­யா­னதா என்­பதில் மாற்றுக் கருத்­துக்கள் இருக்­கின்­றன.

இந்­தியா தனக்கு உகந்த தீர்­வையே தமி­ழர்­க­ளுக்கு வழங்க முற்­பட்­டது, அதுதான் உண்மை.

அதுதான், அதனை தமி­ழர்­த­ரப்பு எதிர்க்­கின்ற சூழ­லுக்குள் கொண்டு வந்து நிறுத்­தி­யது.

இந்த விட­யத்தில் தமி­ழர்கள் மீது முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்கள் அபத்­த­மா­னவை.

ஏனென்றால், இந்­தியா தன் தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­காக தலை­யீடு செய்­ததே தவிர, தமிழர் பிரச்­சி­னையை தீர்க்க வேண்டும் என்ற ரீதியில் செயற்­பட்­டி­ருக்­க­வில்லை.

இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரையில், தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை அது தீர்த்து வைக்க முயன்­றாலும், தனது சொந்த நலன்­களின் மீதான கண்­ணோட்­டத்தின் அடிப்­ப­டை­யி­லேயே அதனை அணுக முற்­பட்­டது.

இதுதான், ஆரம்ப கட்­டத்­தி­லேயே இந்­தி­யாவின் அமைதி முயற்­சிகள் தோல்­வியை நோக்கி அல்­லது சறு­கலை நோக்கி செல்­வ­தற்கு காரணம்.

ஜே.ஆர்.ஜய­வர்­தன அர­சாங்­கத்­துடன் தமி­ழர்கள் சார்­பாக, இந்­தி­யாவே உடன்­பாடு செய்து கொண்­டது, அந்த உடன்­பாட்டை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக போர் நடத்­தவும் தீர்­மா­னித்­தது.

அந்தப் போரின் போது தமிழ் மக்கள் மீது கட்­ட­விழ்த்து விட்ட மோச­மான மனித உரிமை மீறல்கள் எல்­லாமே, இந்­தியா தமி­ழர்கள் சார்பில் செயற்­ப­ட­வில்லை என்ற எண்­ணப்­பாட்டை தமிழ் மக்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­யது.

அதே­வேளை, இந்த விவ­கா­ரத்தில், இந்­தியா தவிர்க்க முடி­யாத ஒரு சக்தி என்­பதும் மறுப்­ப­தற்கு இல்லை.

இந்­திய பெருங்­க­டலில் கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடத்தில் அமைந்­துள்ள இலங்கைத் தீவில் எங்கே பிரச்­சினை ஏற்­பட்­டாலும், அமைதி ஏற்­பட்­டாலும்,அதன் விளை­வுகள் இந்­தி­யா­விலும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும்.

இங்கு போர் தீவி­ர­ம­டைந்த ஒவ்­வொரு கால­கட்­டத்­திலும், தமி­ழர்கள் இந்­தி­யா­விற்கே அக­தி­க­ளாகப் படை­யெ­டுத்து சென்­றார்கள்.

பொரு­ளா­தார நெருக்­க­டியின் போதும் அவ்­வாறே இந்­தி­யாவைத் தான் பலர் நாடி ஓடி­னார்கள்.

இப்­படி இலங்­கையில் நடக்கும் எத்­த­கைய ஒரு செயலும், இந்­தி­யாவின் மீது தாக்கம் செலுத்தக் கூடி­ய­தாக இருக்­கி­றது. அதனால் இந்­தியா கொழும்பின் மீது தனது ஆளு­கையைச் செலுத்த, இந்த விவ­கா­ரத்தை தன் கைக்குள் வைத்துக் கொண்­டது.

அதற்­காக கைச்­சாத்­தி­டப்­பட்­டது தான், இந்­திய – -இலங்கை ஒப்­பந்தம். அந்த ஒப்­பந்தம் இப்­போதும், நடை­மு­றையில் இருக்­கி­றது, ஆனால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அந்த ஒப்­பந்தம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தால், போருக்கு அடிப்­ப­டை­யான முக்­கி­ய­மான பல கார­ணங்கள் இப்­போது இல்­லாமல் போயி­ருக்கும்.

அதே­வேளை, தமி­ழர்­களை வைத்து கொழும்பை கையா­ளு­வ­தற்கு இந்­தியா பயன்­ப­டுத்திக் கொண்ட சூழல், இப்­போது மாறி­யி­ருக்­கி­றது.

ஜே.ஆர்.காலத்­தி­லேயே அந்த மாற்றம் நிகழத் தொடங்கி விட்­டது.

புது­டில்­லியை தமது பக்கம் வைத்துக் கொள்­வதன் ஊடாக, தமிழர் தரப்பை பல­மற்­ற­வர்­க­ளாக மாற்­று­கின்ற கொழும்பு இரா­ஜ­தந்­தி­ரத்தின் ஒரு பகுதி தான் இந்­திய- –இலங்கை ஒப்­பந்தம்.

ஜே.ஆர்.ஜய­வர்­தன இந்­திய- –இலங்கை ஒப்­பந்­தத்தின் ஊடாக இந்­திய படை­களை வர­வ­ழைத்து, வடக்கு கிழக்கில் நிறுத்தி விட்டு தனது படை­களைப் பாது­காப்­பாக வைத்துக் கொண்டார்.அவ­ருக்கு பிறகு ஆட்­சிக்கு வந்த ரண­சிங்க பிரே­ம­தாச, இந்­தி­யா­வு­ட­னான உற­வு­களைச் சரி­யாக கையா­ள­வில்லை.

அதற்குப் பின்­ன­ரான சூழலில் சந்­தி­ரிகா குமா­ர­துங்க, மஹிந்த ராஜபக் ஷ, ரணில் விக்­கி­ர­ம­சிங்க, கோட்­டா­பய ராஜபக் ஷ போன்­ற­வர்கள் இந்­தி­யாவை தந்­தி­ர­மாக கையாண்­டனர்.

அவர்கள் இந்­தி­யா­வுடன் நெருக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம், தமிழர் தரப்­பிடம் இருந்து இந்­தி­யாவை அந்­நி­யப்­ப­டுத்த தொடங்­கினர்.

கோட்­டா­பய ராஜபக் ஷ, மஹிந்த ராஜபக் ஷ,மிலிந்த மொற­கொட ஆகியோர் இந்த விட­யத்தை இன்னும் செம்­மைப்­ப­டுத்தி நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு கார­ண­மாக இருந்­தனர்.

மிலிந்த மொற­கொ­டவே தெளி­வான வழி­வ­ரை­ப­டத்தை உரு­வாக்­கினார். அதற்­கான எழுத்து வடி­வங்­க­ளையும் கொடுத்தார்.

இதன் மூல­மாக அவர்கள் தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையே இருந்து வந்த நெருக்கத்தில் ஒரு தடையை ஏற்படுத்தினார்கள்.

அந்தத் தடை இப்பொழுது மிகப்பெரிய இடைவெளியாக மாறியிருக்கிறது. இரு தரப்பையும் விலக்கி வைத்திருக்கிறது.

இதனைத் தாண்டியே அடுத்த கட்டம் நோக்கி தமிழர்கள் நகர வேண்டியிருக்கிறது.

இந்த இடத்தில் கொழும்பு ஆட்சியாளர்கள் நன்கு திட்டமிட்டு இந்தியாவிற்கு எது தேவையோ அதனை செய்து கொடுக்கிறார்கள்.

அவ்வாறுதான் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் வளங்களையும் இந்தியாவிற்கு கொடுப்பதன் மூலம், அவர்கள் தமிழர்களை புதுடில்லி நெருங்கி விடாத சூழலை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

இந்த இடைவெளியைக் கடக்காமல், இந்தச் சூழலை தாண்டி செல்லாமல் இந்தியாவை நெருங்குவதோ, இந்தியாவின் அரவணைப்புக்குள் தமிழர்கள் செல்வதோ அவ்வளவு இலகுவானதல்ல.

-ஹரிகரன்-

Share.
Leave A Reply