“லக்னோ,உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் பல்கல்கஞ்ச் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் காலை 10 மணியளவில் நண்பர்கள் 4 பேர் ஒரே பைக்கில் சென்றுகொண்டிருந்தனர்.
கோரக்பூர் – வாரணாசி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வேகமாக வந்த கார் , பைக் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் பைக்கில் பயணித்த அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 4 பேரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமத்தனர்.
ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் தலைமறைவாக உள்ளார்.
விபத்தில் உயிரிழந்த 4 பேரும் நண்பர்கள் ஆவர். இதில் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருந்தது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கார் டிரைவரை தேடி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
4 youths including three cousins riding on a bike died after hit by a Grand Vitara car on Gorakhpur Varanasi Highway in Barhalganj, Gorakhpur.
3 of them got thrown 20 feet up after the collision and fell down while 1got stuck on the bonnet of the car @Uppolice @myogiadityanath pic.twitter.com/sGCGZDlXuJ— Shreepad Gokhale (@SriVallabh5453) June 1, 2025