நடந்தது_என்ன? #விபரம்_இதோ

நான் மேசன் வேலைக்கு கொழும்பு செல்பவன்! 21 வயது அருட்குமரன் என்ற பெடியன் என் மனைவியுடன்… வவுனியாவில் ஆசிரியையின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவனனின் பரபரப்பு வாக்குமூலம்!!

தனது மனைவியை கொலை செய்ததாக கணவர் மனைவியின் தலையுடன் புளியங்குளம் காவல் நிலையத்தில் சரணடைந்த கொடூர சம்பவம் நேற்றய தினம் (03.06) இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 35 வயதான யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சுகிர்தரன் என்ற இளம் குடும்பஸ்தரான மரணமடைந்த பெண்ணின் கணவர் வழங்கிய வாக்கு மூலத்தில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவர்ணலதா என்ற 32 வயதான தனது மனைவி மூன்று மாதம் கர்ப்பிணியாக இருப்பதாகவும் அதில் ஏற்பட்ட சந்தேகமே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் கொழும்பில் தங்கி இருந்து கட்டட வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள குறித்த இளம் குடும்பஸ்தர்,

நீண்ட காலமாக தனக்கும் மனைவிக்கும் இடையில் கள்ள தொடர்பு தொடர்பில் பல சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை தனது தொலைபேசிக்கு ஒரு 21 வயது அருட்குமரன் என்ற இளைஞனினால் அனுப்பப்பட்ட புகைப்படங்களால் தனது கோபம் உச்சம் அடைந்ததோடு தான் கொழும்பிலிருந்து நொச்சிக்குளம் கிராமத்திற்கு வருகை தந்து என் மனைவியுடன் இது தொடர்பாக புகைபடங்களை கான்பித்து பல்வேறு விடயங்களில் கருத்து முரண்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அருட்குமரனை நான் தீர விசாரித்த போது மனைவியில்தான் முழுப்பிழையும் உள்ளதை தான் அறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் இதில் தீர்வு கிடைக்காத நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம், மானிப்பாய் சென்று பின்னர் திங்கட்கிழமை மீண்டும் வருகை தந்து மனைவியை தாய் சேய் பராமரிப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்த அவர்,

இந்த குழந்தைக்கு காரணம் யார் என்பது தொடர்பில் தனக்கு நீண்ட கால சந்தேகம் ஏற்பட்டு இருந்ததாகவும் இது தொடர்பாக தன் மனைவியிடம் கேட்டபோதிலும் அவர் எவ்விதமான பதிலும் கூறவில்லை.

நேற்றய தினம் (03.06) காலை அவர் அதை ஒத்துக் கொண்டதையடுத்து தனது மனைவியை புளியங்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியே சின்ன பூவரசங்குளம் காட்டுப்பாதையினால் அழைத்து வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

அந்த காட்டுப் பாதையின் வழியே 200 மீட்டர் அளவில் சென்றதன் பின்னர் மனைவி ஏன் இந்த வீதியால் செல்கிறீர்கள் என கேட்டபோது, தான் அந்த குறித்த 21 வயது இளைஞன் இந்த பகுதிக்கு வருவதாகவும் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு காண்பதற்காக உன்னை அழைத்து வந்திருக்கிறதாகவும் கூறியதாகவும் காவல்துறையிடம் கூறி இருக்கின்றார்.

இதன் பின்னர் நான் மறைத்து வைத்திருந்த கத்தியின் மூலம் மனைவியை வெட்டியதாகவும், அவர் சிறிது தூரம் ஓடி விழுந்ததன் பின்னர் மீண்டும் மனைவியை மூன்று முறை வெட்டி கழுத்தை துண்டாக்கி அதனை அவர் அணிந்திருந்த மழைக் கவசத்தினால் மூடி மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் வைத்து கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து காவல்துறையினர் குறித்த மோட்டார் சைக்கிளையும், தலையையும் கைப்பற்றியதோடு அவரையும் கைது செய்திருந்தனர்.

இதனை அடுத்து உயிரிழந்து இறந்த பெண்ணின் கணவன் சுகிர்தரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சின்ன பூவரசங்குளம் காட்டுப் பகுதிக்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி இருந்தனர்.

குறித்த பகுதிக்கு தடயவியல் காவல்துறையினரும் வருகை தந்து அங்கிருந்த சான்று பொருட்களை சேகரித்ததோடு, குறித்த விடயம் தொடர்பாக புளியங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை ஆசிரியையுடன அந்தரங்கத் தொடர்பு வைத்திருந்த குறித்த 21 வயது அருட்குமரன் தலைமறைவாகியுள்ளார். அவனை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தேடி வருவதாகவும் தெரியவருகின்றது.

Share.
Leave A Reply