உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் நிறை­வுக்கு வந்­ததன் பின்னர் வடக்கு, கிழக்­கில் ஆட்சி அமைப்­ப­தற்­காக தமிழ்த் தேசியக் கட்­சிகள் தமக்­கி­டையில் கூட்­டி­ணைந்து பல்­வேறு சுற்­றுப்­பேச்­சுவார்த்­தை­களை நடத்­தி­யி­ருந்­தன.

இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சிக்கும், ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­ட­ணிக்கும் இடை­யிலும், ஜன­நா­யகத் தமிழ்த் தேசியக் கூட்­ட­ணிக்கும், தமிழ்த் தேசிய பேர­வைக்கும் இடை­யிலும், இறு­தி­யாக இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சிக்கும், தமிழ்த் தேசிய பேர­வைக்கும் இடை­யிலும் அப்­பேச்­சுவார்த்தைகள் நடை­பெற்­றி­ருந்­தன.

இருப்­பினும், ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­டணி கோரிய ஆறு சபை­க­ளுக்­கான ஆட்சி அதி­கா­ரத்தை தமி­ழ­ர­சுக்­கட்சி வழங்­கு­­வ­தற்கு தயா­ராக இருக்­க­வில்லை. அதே­போன்று, தமிழ்த் தேசிய பேர­வையும் ‘கொள்கை உடன்­பாடு’ விட­யத்­தினை முன்­னி­லைப்­ப­டுத்­தி­யதால் தமி­ழ­ர­சுடன் இணைய முடிந்­தி­ருக்­க­வில்லை.

இவ்­வா­றான நிலையில் தான் தமிழ்த் தேசிய பேர­வையும், ஜன­நா­யகத் தமிழ்த் தேசியக் கூட்­ட­ணியும் கடந்த 2ஆம் திகதி ‘கொள்கை உடன்­பாட்டில்’ கையொப்­ப­மிட்டு கூட்­டி­ணைந்து கொண்­டன.

இந்த இணைவின் மூல­மாக தமிழ்த் தேசிய பேரவை முன்­னிலை வகிக்கும் மூன்று சபை­க­ளிலும், ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­டணி ஆதிக்கம் செலுத்தும் ஐந்­துக்கு மேற்­பட்ட சபை­க­ளி­லு­மாக ஏறக்­கு­றைய பத்­துக்கும் மேற்­பட்ட சபை­களில் ஆட்சி அமைக்கும் நிலை­மைகள் ஏற்­பட்­டுள்­ளன.

மறு­பக்­கத்தில் தமி­ழ­ரசுக் கட்சி முன்­னிலை பெற்ற சபை­களில் ஆட்சி அமைக்க முடி­யாத நிலை­களே தோன்­றி­யி­ருந்­தன.

இவ்­வா­றான சூழலில் தான் இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யின் பதில் தலைவர் சி.வி.கே.சிவ­ஞானம் கடந்த புதன்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்தில் உள்ள ஈ.பி.டி.பியின் தலை­மை­ய­கத்­துக்கு நேரில் சென்று யாழ். மாந­கர சபை உட்­பட தாங்கள் முன்­னிலை பெற்ற சபை­களில் ஆட்சி அமைப்­­ப­தற்­கான ஆத­ர­வினைக் கோரி­யி­ருந்­தார்.

ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­டணி மற்றும் தமிழ்த் தேசிய பேரவை ஆகி­ய­வற்­று­ட­னான பேச்­சுக்கள் நடை­பெற்ற தரு­ணத்­தி­லேயே சி.வி.கே.சிவ­ஞானம், டக்­ள­ஸுடன் உரை­யாட ஆரம்­பித்­தி­ருந்தார். எனினும் அவை உத்­தி­யோ­கப்­பற்­றற்ற தொலை­பேசி உரை­­யா­டல்களாகத் தான் இருந்தன.

இந்­நி­லையில் இறு­தி­யாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக சி.வி.கே.நேரில் சென்று டக்­ளஸின் ஆத­ர­வினைக் கோரி­யி­ருக்­கின்றார். இந்த விடயம் தமிழ்த் தேசிய தளத்­திலும், தமி­ழ­ர­சுக்­கட்­சிக்­குள்ளும் பாரிய எதிர்ப்­புக்­களை தோற்­று­வித்­துள்­ளது.

முன்­ன­தாக, புளொட் தலைவர் சித்­தார்த்தன், கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­ப­லத்­துடன் உடன்­பாட்டைச் செய்­து­விட்டு, டக்­ள­ஸுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு முனைந்­தி­ருந்தார். அதனை டக்­ளஸே உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்தார். எனினும், கஜேந்­தி­ர­குமார், சித்­தார்த்தன் மீது ‘அன்­பாக’ கடிந்து கொண்­ட­மையால் அந்தச் சந்­திப்பு நடை­பெற்­றி­ருக்­க­வில்லை.

இதனால், கஜேந்­தி­ர­குமார் தலைமையிலான தமிழ் தேசிய பேரவை, ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­டணி ஆகிய தரப்பின் கூட்டு தப்பிப் பிழைத்­துக்­கொண்­டது. எனி­னும் அந்­தக் கூட்­ட­ணியில் சம­வத்­துவக் கட்­சி­யின் பொதுச்­­செ­ய­லாளர் சந்­தி­ர­குமார் பங்­­கேற்­றி­­ருப்­பது விமர்­ச­னங்­களை உரு­வாக்­கி­யுள்­ளது.

அவர் டக்­ஸுடன் இருந்­தவர் என்­பது ஒரு ­வி­மர்­சனம். மற்­றைய விமர்­சனம் சுமந்­தி­ரனால் குறித்த கூட்­டுக்குள் அனுப்பி வைக்­கப்­பட்­டவர் என்­ப­தாகும். எவ்­வா­றா­யினும், கடுந்­தமிழ்த் தேசியம் பேசிய கஜேந்­தி­ர­குமார், ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­ட­ணி­யுடன் கூட்டு வைத்­துக்­கொண்­டமை அவ­ரது ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு மத்­தியில் விமர்­ச­னத்தை உரு­வாக்­கி­யுள்­ளது.

குறித்த இணைவை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் மிக­மோ­ச­மாக வெளிப்­ப­டுத்­தி­னார்கள். கடு­மை­யாக விமர்­சிக்­கவும் செய்­தனர். ஈற்றில், தமி­ழ­ர­சுக்­கட்­சியின் பதில் தலைவர், ஸ்ரீதர் தியேட்­ட­ருக்குச் சென்று டக்­ளஸை சந்­தித்­தமை அத­னை­வி­டவும் மோச­மான விமர்­ச­னத்தை தோற்­று­வித்­தி­ருக்­கின்­றது.

குறித்த சந்­திப்­புக்குச் செல்­வ­தற்கு முன்­ன­தாக சிவ­ஞானம் சிறி­தரன், மூன்று நான்கு தட­வைகள் சி.வி.கேயை தொடர்பு கொள்ள முனைந்­தி­ருந்தார். ஆனால், முடிந்­தி­ருக்­க­வில்லை. டக்­ள­ஸுடன் சந்­திப்பு முடியும் வரையில் அன்­றைய நாளில் சி.வி.கே. எவ­ரு­டைய தொலை­பேசி அழைப்­புக்கும் பதி­ல­ளிக்­க­வில்லை.

இதனால் குறித்த சந்­திப்பில் பங்­கேற்க வேண்டாம் என்று குறிப்­பிட்டு சிறி­தரன் எம்.பி. குறுந்­த­க­வ­லொன்றை அனுப்பி வைத்­துள்ளார். எனினும், சி.வி.கே. சந்­திப்பை நிறைவு செய்­தி­ருந்தார். அத­னைத்­தொ­டர்ந்து சிறி­த­ர­னுக்கும், சி.வி.கே.க்கும் இடையில் உரை­யா­ட­லொன்றும் நடை­பெற்­றுள்­ளது. அது கடும் வாதப்­பி­ர­தி­வா­தங்­க­ளுக்கு உள்­ளா­கி­ய­தாக தகவல்.

அதே­போன்று சமூக ஊட­கங்­களில் சி.வி.கே.யின் செயற்­பாட்­டிற்கு கடு­மை­யான எதிர்ப்­­புக்கள் எழுந்­த­போது, சுமந்­தி­ரனும் சி.வி.­கேயுடன் உரை­யா­டல்­களைச் செய்­துள்­ளார்.

இத­னை­ய­டுத்து நேற்று முன்­தினம் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டைக் கூட்டி தாங்கள் மத்­திய குழு­விலும் அர­சியல் குழு­விலும் முன்­னி­லை­பெற்ற சபை­களில் ஆட்சி அமைப்­ப­தற்­காக தமிழ்க் கட்­சி­க­ளுடன் உரை­யா­டு­வ­தென்று தீர்­மானம் எடுத்தோம் (குறித்த கூட்­டங்கள் நிறை­வ­டைந்­ததன் பின்னர் முன்­னி­லை­பெற்ற சபை­களில் ஆட்சி அமைப்­ப­தற்கு தமிழ்த்­தே­சியக் கட்­சி­க­ளுடன் உரை­யாடி ஒத்­து­ழைப்பை பெறுவோம் என்றே அறி­விக்­கப்­பட்­டது) என்று ‘தேசி­யத்தை’ தவிர்த்து சுமந்­திரன் மற்றும் சி.வி.கேயால் வியாக்­கி­யானம் வழங்­கப்­பட்­டது,

இதற்குள் சி.வி.கேயின் செயற்­பாட்டைக் காட்­ட­மாகக் கண்­டித்தும் விளக்கம் கோரியும் சிறி­தரன் கடி­த­மொன்றை அனுப்பி வைத்தார். அது­மட்­டு­மன்றி, மறைந்த தலைவர் மாவை. சோ.சேனா­தி­ரா­ஜாவின் அனு­தாபப் பிரே­ரணை மீதான உரை­யின்­போது டக்­ளஸை கடு­மை­யாக விமர்­சித்து கட்சி கொள்கையின் அடிப்­ப­டையில் பய­ணிக்க வேண்டும் என்று உரை­யாற்­றினார்.

இவ்­வாறு சுமந்­திரன் அணியும், சிறி­தரன் தரப்பும் ஏட்­டிக்­குப்­போட்­டி­யாக தாக்­கு­தல்­களை நடத்­திக்­கொண்­டி­ருக்­கையில் நேற்று முன்தினம் மாலை 7 மணி­ய­ளவில் மெய்­நிகர் வழியில் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் அர­சி­யல்­குழுக் கூட்டம் நடை­பெற்­றது. குக­தாசன், கலை­ய­ரசன் தவி ர்ந்த ஏனை­ய­வர்கள் பங்­கேற்­றார்கள். இதில் சி.வி.கே., டக்­ள­ஸுடன் சந்­திப்பை நடத்­தி­யதை சிறி­தரன் மிகக் கடு­மை­யாக சாடினார்.

அப்­போது, மத்­தி­ய­குழு, அர­சியல் குழுக்­கூட்­டத்தின் தீர்­மா­னத்­துக்கு அமை­வா­கவே அவர் சந்­திப்பைச் செய்­த­த­தாக நியாயம் கற்­பிக்­கப்­பட்­டது. எனினும், அவ்­வாறு தீர்­மானம் எடுக்­கப்­ப­டவே இல்லை என்று சிறி­தரன் சுட்­டிக்­காட்­டினார்.

இதற்குள் சாணக்­கியன், கூட்­டத்­தீர்­மானங்­­களை சிறி­தரன் வெளியில் சொல்­கிறார் என்று ஆரம்­பித்து, மாவையின் இறுதிச் சடங்கிற்கு டக்ளஸ் வந்­த­தையும், அந்­தி­யேட்­டிக்கு வந்­த­தையும் சுட்­டிக்­காட்­டி­ய­தோடு, டக்­­ளஸ், மாவையை கொல்ல முயன்றார் என்று பாராளு மன்றில் உரை­யாற்­றியதையும் இணைத்து கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­தினார்.

சிறி­தரனைத்தவிர, ஏனை­ய­வர்கள் சி.வி.கே. டக்­ள­ஸுடன் உரை­யா­டி­யது சரி­யென்ற தொனிப்பொ­ருளில் இருக்­கவும் சிறி­தரன் தனது நிலைப்­பாட்டை கட்­சிக்­குள்ளும் வெளி­யிலும் வெளிப்­ப­டுத்த உள்ள சுதந்­தி­ரத்­தினை குறிப்­பிட்டு சாணக்­கி­ய­னுக்கு பதி­லடி வழங்­கினார்.

இவ்­வாறு ஒரு­வ­ரை­யொ­ருவர் மாறி­மாறி விமர்­சனம் செய்து கொண்­டி­ருந்த நிலையில் சுமந்­திரன், தமி­ழ­ர­சுக்­கட்சி முன்­னிலை பெற்ற இடங்­களில் மேயர், தவி­சாளர் பத­வி­க­ளுக்­கான வேட்­பா­ளர்கள் நிறுத்­தப்­ப­டு­வார்கள் என்று சுருக்­க­மாகக் கூறி முடித்­து­விட்டார்.

இதற்குள், பத­வி­களும், ஆச­னங்­களும் தேவை­யாக இருந்தால் நாங்­களே தரு­கின­்­­றோம். ஆனால் தமிழ்த் தேசி­யத்­துக்கு விரோ­த­மாக இருக்­கின்ற தரப்­புடன் இணைய வேண்­டாம் என்று கஜேந்­தி­ர­கு­மாரும், செல்­வம் அடைக்­க­ல­நா­தனும் கூட்­டாக கோரி­­யுள்­ளனர்.

ஆனால் அதற்கு பதி­ல­ளிப்­ப­தற்கு தமி­ழ­ர­சுக்­கட்சி தயா­ரில்லை. தற்­போது தமி­ழ­ர­சுக்­கட்சி ஜன­நா­யக தமி­ழ­ர­சுக்­கட்­சியின் பங்­கா­ளிக்­கட்­சி­யான ஜன­நா­யக போரா­ளிகள் கட்­சியை வளைத்­துப்­போ­டு­வ­தற்கு முயற்­சித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது.

இதற்குள் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் முக்­கி­யஸ்தர் ஒருவர், தேசிய மக்கள் சக்­தியின் யாழ். மாவட்ட பொறுப்­பா­ளரும், அமைச்­ச­ரு­மான இரா­ம­லிங்கம் சந்­தி­ர­சே­க­ருடன் உரை­யா­டி­ய­தா­கவும் தக­வல்கள் உள்­ளன.

அப்­போது இரா­ம­லிங்கம் சந்­தி­ர­சே­கர் யாழ். மாந­கர சபையை விட்­டுத்­தா­ருங்கள் ஏனைய அனைத்­திலும் ஆத­ர­வ­ளிக்­கின்றோம் என்று நிபந்­த­னையை போட்­டுள்ளார். அதற்­குமேல் பேச்­சுக்கள் தொட­ர­வில்­லையாம் என்றும் கூறப்­ப­டு­கின்­றது.

நாமலை அவசரமாக அழைத்த மஹிந்த

நாமல் ராஜபக் ஷவை அவசரமாக மஹிந்த ராஜபக் ஷ இந்த வாரத்தின் நடுப்பகுதியில் அழைத்துள்ளார். தந்தையின் திடீர் அழைப்­பையடுத்து கொழும்புக்கு அண்மித்த பகுதி­யி­லிருந்த நாமல் தடாலடியாக விஜேராம­வுக்குச் சென்றுள்ளார்.

அப்போது, ‘உள்ளூராட்சி மன்றங்களில் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட தரப்புக்கள் ஆட்சி அமைப்ப தற்குரிய சபைகளில் பெரமுனவும் ஆதர வினை வழங்க வேண்டும். இந்த விடயத்தில் பேச்சுக்களை நடத்து­வதையோ, ஊடகங்களில் கருத்துக் களை வெளியிடுவதையோ தவிர்த்து சரியாக காய்­களை நகர்த்த வேண்டும்’ என்று வலி­யுறுத்தியுள்ளார்.

அப்போது, நாமல் ராஜபக்ஷ ‘நாங்கள் எதிர்ப்புக்களை வெளியிடப்போவதில்லை. நீங்கள் கூறியதன் படியே செய்கின்றோம்’ என்று பதிலளித்துள்ளார்.

அப்போது மஹிந்த புன்னகையுடன், ‘நீங்­கள் வேலைப்பளுவுடன் இருப்பீர்கள் சென்று வாருங்கள்’ என்று அனுப்பி வைத்துள்ளார்.

ரணிலின் இராஜயோகம்

அண்மையில் விருந்துபசாரமொன்றுக்கு சென்றி­ருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சியில் உள்ள சில உறுப்பினர்களுடன் உரையாடிக­்கொண்டி­ருந்­ தார்.

அப்போது அங்கு வருகை தந்திருந்த, தொழிலதிபர் ஒருவர், ‘சேர் எப்படி­யிருக்­கின்றீர்கள். நீங்கள் ஜனாதிபதியாகிய அனுப­வத்தை ஒரு தடவை கூறுங்கள்.அதனை நான் உங்களிடமிருந்து கேட்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன் ’என்றார் பீடிகையுடன்.

அப்போது, ரணில் விக்கிரமசிங்க, ‘அது­வொரு நீண்ட கதை. இப்போது கூற முடி­யாது. ஆனால் ஒரு சிறு விடயத்தினை பகிரு­கின்றேன். நான் ஜனாதிபதியாவதற்கு முன்னர் எனக்கு இராஜயோகம் இருக்கின்றது என்று ஜோதிடர் ஒருவர் சொன்னார். அப்போது நான் அவரிடம் தேர்தல் அண்மைக்காலங்களில் இல்லையே என்றேன். அச்சமயத்தில் அவர் நீங்கள் தேர்தல் மூலமாக ஜனாதிபதியாகப் போவதில்லை என்றார்.

அதேபோல் தான் இறுதியில் நடந்து முடிந்­­தது. நான் தேர்தலுக்குச் செல்லாமல் ஜனாதி­பதியாகி விட்டேன் என்றார். அதன­்போது குறித்த தொழிலதிபர், அந்த இராஜ­யோகம் இன்னமும் இருக்கிறதோ தெரிய­வில்லை என்று கேள்வியொன்றை தொடுத்­ தார்.

அப்போது ரணில் விக்கிரமசிங்க புன்ன­கையுடன், நான் மீண்டும் அந்த ஜோதிடரிடம் செல்லவில்லை. ஆனால் அரசாங்கம் போகின்ற போக்கைப் பார்க்கின்றபோது அந்த இராஜயோகம் நிறைவடையவில்லை என்றே கருதுகின்றேன் என்று கூறவும் அங்­கிருந்த­வர்கள் ‘கொல்’ என்று சிரித்தனர்.

கொள்­க­லன்கள் விவ­காரம்

கொழும்புத் துறை­மு­கத்­தி­லி­ருந்து எவ்­வித பரி­சோ­த­னை­களும் இன்றி சிவப்பு அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டி­ருந்த கொள்­க­லன்கள் விடு­விக்­கப்­பட்ட சர்ச்சை தொடர்பில் பலரும் பல்­வேறு கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர்.

இந்த விவ­கா­ரத்தில் அர­சாங்­கத்தின் மௌனமே, அனை­வ­ரது அவ­தா­னத்­தையும் ஈர்த்­துள்­ளது. யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான இரா­ம­நாதன் அர்ச்­சுனா இது தொடர்பில் புதிய கருத்­தொன்றை பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­துள்ளார். குறித்த கொள்­க­லன்­களில் பிர­பா­க­ரனின் ஆயு­தங்கள் இருந்­த­தா­கவும், அவை தாய்­லாந்­தி­லி­ருந்து கொண்டு வரப்­பட்­ட­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

எவ்­வா­றி­ருப்­பினும், இந்த கொள்­க­லன்கள் குறித்து விசா­ரிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழுவின் அறிக்­கையில், சமூ­கத்தில் கூறப்­ப­டு­வதைப் போன்று பார­தூ­ர­மான பொருட்கள் எவையும் இல்லை எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக ரணி­லுக்கு தகவல் கிடைத்­தி­ருக்­கி­றது.

இது தொடர்பில் முறைப்­பா­ட­ளித்­தி­ருந்த தொழிற்­சங்­கத்­தையும் அர­சாங்கம் தன்­வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளது. எவ்­வா­றி­ருப்­பினும் எதிர்­கா­லத்­திலும் இந்த விவ­காரம் தொடர்பில் தொடர்ந்தும் கேள்­வி­யெ­ழுப்ப எதிர்க்­கட்­சி­களின் கூட்­டணி தீர்­மா­னித்­துள்­ளது.

புலி­களின் ஆயு­தங்கள்

கொழும்பு துறை­மு­கத்­தி­லி­ருந்து எவ்­வித சோத­னை­க­ளு­மின்றி விடு­விக்­கப்­பட்ட கொள்­க­லன்­களில் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் ஆயு­தங்­களே காணப்­பட்­ட­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா­ம­நாதன் அர்ச்­சுனா தெரி­வித்­தி­ருந்தார்.

எனினும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா­ம­நாதன் அர்ச்­சுனா தெரி­வித்­துள்ள இந்த விடயம் முற்­றிலும் ஆதா­ர­மற்­ற­தாகும், அத்­த­கைய குற்­றச்­சாட்­டு­களை நிரூ­பிப்­ப­தற்கு எவ்­வித ஆத­ரமும் இல்லை.

தேசிய பாது­காப்­புடன் தொடர்­பு­டைய விட­யங்­களை இவ்­வாறு அர­சி­ய­லாக்­கவோ அல்­லது தவ­றாக சித்­த­ரிக்­கவோ கூடாது. துறை­மு­கத்தில் ஏற்­பட்ட நெரிசல் கார­ண­மாக 323 கொள்­க­லன்கள் எவ்­வித சோத­னை­களும் இன்றி விடு­விக்­கப்­பட்­ட­தாக பாது­காப்பு செய­லாளர் சம்பத் துய்­ய­கொந்த மறுத்­தி­ருந்தார்.

ஆனால், குறித்த கொள்­க­லன்கள் சிவப்பு அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டவை என்றும், அவற்­றில் அபா­ய­க­ர­மான பொருட்கள் காணப்­­பட்­ட­தா­கவும் பல தரப்­பி­ன­ராலும் தெரி­­விக்­­கப்­பட்­டது.

அண்­மையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­கர மற்றும் பிவி­துரு ஹெல உறு­ம­யவின் தலைவர் உதய கம்­மன்­பில ஆகியோர் இது தொடர்பில் தெரி­வித்­தி­ருந்த கருத்­துக்கள் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன.

தயா­சிறி ஜய­சே­கர கடந்த புதன்­கி­ழமை இவ்­வி­டயம் தொடர்பில் குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்தில் வாக்­கு­மூ­ல­ம­ளித்­தி­ருந்தார். இந்­நி­லை­யி­லேயே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அர்ச்­சுனா இவ்­வா­றா­ன­தொரு விட­யத்தை வெளி­யிட்­டுள்ளார்.

ஜனா­தி­பதி பதில்

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா­ம­நாதன் அர்ச்­சுனா தெரி­வித்த இந்த கருத்து தொடர்பில் பாது­காப்பு அமைச்சு உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பை வெளி­யி­ட­வில்லை.

மாறாக ஊடகம் ஒன்று கேட்ட கேள்­விக்கு சிறு விளக்­கத்தை மாத்­தி­ரமே குறிப்­பிட்­டி­ருந்­தது. இது குறித்து பாது­காப்பு அமைச்சில் கேட்ட போது, உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பை வெளி­யிட பாது­காப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனா­தி­பதி இது­வ­ரையில் தீர்­மா­னிக்­க­வில்லை என்று குறிப்­பிட்­டனர்.

இது இவ்­வா­றி­ருக்க மறு­புறம், ‘அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­கா­விட்டால் குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்கள் சிறைக்கு சென்­றி­ருக்க மாட்­டார்கள்’ என்று மொறட்­டு­வையில் கடந்த வாரம் நீதி அமைச்சர் தெரி­வித்த கருத்து, எதிர்க்­கட்­சிகள் உள்­ளிட்ட பல தரப்­பினர் மத்­தி­யிலும் கடு­மை­யான விமர்­ச­னத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ளது. அவ­ரது இந்த கருத்­தா­னது நீதித்­து­றையின் சுதந்­தி­ரத்தின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு பாரிய தாக்­கு­த­லாகும் என்றும் பல­ராலும் விமர்­சிக்­கப்­ப­டு­கி­றது.

எதிர்க்­கட்­சி­களின் ஒன்­றி­ணைவு

உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களை நிய­மிப்­பது தொடர்­பான பேச்­சு­வார்த்­தைகள் ஆரம்­ப­மா­ன­வுடன், சிதறிக் கிடந்த எதிர்க்­கட்­சிகள் மீண்டும் ஒன்­றி­ணைந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது.

தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் ஆட்­சி­ய­மைத்து ஆறு மாதங்கள் என்ற குறு­கிய காலத்­துக்குள் எதிர்க்­கட்­சி­களை ஒன்­றி­ணைத்த திறன், கூட்டு எதிர்க்­கட்­சியின் திற­மையால் கூட்­டணி அடைந்த சாத­னை­யாகும் என அர­சியல் விமர்­ச­கர்கள் நம்­பு­கின்­றனர்.

எதிர்க்­கட்­சி­களின் இந்த ஒன்­றி­ணைந்த கூட்­ட­ணிக்கு முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே மூல­கர்த்தா ஆவார். இக்­கூட்­டணி பலம் பெற, அதன் பின் இருந்து உழைத்­த­வரும் அவர்தான்.

முதன் முத­லாக ஐக்­கிய தேசியக் கட்சி இந்த எதிர்க்­கட்­சி­களின் கூட்­ட­ணியை ஆரம்­பித்­தது. அதன் பின்னர் படிப்­ப­டி­யாக ஏனைய அனைத்துக் கட்­சி­களும் ஐ.தே.க.வைச் சுற்றித் திரண்­டன. இதன் ஆரம்­பக்கட்ட நட­வ­டிக்­கைகள் முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கொழும்­பி­லுள்ள தனிப்­பட்ட அலு­வ­ல­கத்­தில் இடம்­பெற்­றது.

ரணில் இதற்­காக ஒரு புதிய அணியை முன்­னி­றுத்தி, அதனை வழி­ந­டத்­தினார். அவரால் முன்­னி­றுத்­தப்­பட்ட அந்த அணி­யி­லி­ருந்தோர் தமக்கு ஒதுக்­கப்­பட்ட பணியை மிகச் சிறப்­பாகச் செய்­தனர்.

தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சித் தரப்­பி­லி­ருந்து பல புதிய குரல்கள் பலம் மிக்­க­வை­யாக முன்­னிலை வகிக்­கின்­றன. நாமல் ராஜ­பக் ஷ, சாமர சம்பத், டி.வி.சானக மற்றும் தயா­சிறி ஜய­சே­கர ஆகியோர் இதில் உள்­ள­டங்­கு­கின்­றனர் என்­பதே அர­சியல் விமர்­ச­கர்­களின் ஒரு­மித்த கருத்­தா­க­வுள்­ளது.

இந்­நி­லையில் எதிர்க்­கட்­சி­யி­லி­ருந்து இந்த வலு­வான குரல்கள் தோன்­றி­யதன் ஊடாக, பாரம்­ப­ரிய எதிர்க்­கட்சித் தலை­வ­ரா­கவே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் சஜித் பிரே­ம­தா­சவின் பத­விக்­கான வகி­பாகம், நீர்த்­துப்­போகச் செய்­யப்­பட்­டுள்­ளமை சக­ல­ருக்கும் தெளி­வாகத் தெரி­கி­றது.

உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான பிர­தி­நி­தி­களை நிய­மிப்­பதில் முக்­கிய பங்கு வகித்த, ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவால் நிய­மிக்­கப்­பட்ட குழு உறுப்­பி­னர்­க­ளிடம் கட்­சியின் எதிர்­காலப் பணி­களை வழி­ந­டத்தும் பொறுப்பையும் ஒப்­ப­டைக்­க ரணில் தீர்­மா­னித்­துள்ளார். இந்த புதிய குழு­வா­னது ஐ.தே.க.வின் எதிர்­கா­லத்­துக்­கான திட்­ட­மி­டல்­களை தயா­ரிக்கும் பணி­க­ளையும் முன்­னெ­டுக்­க­வுள்­ளது. இந்தக் குழு ஒரு அணி­யாக செயல்­படும்.

ரணி­லுக்கு எதி­ராக சதியா?

இந்தப் புதிய குழுவின் செயற்­பா­டுகள் குறித்து கட்­சியின் பல மூத்த தலை­வர்கள் தங்கள் அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது. எந்த பணி­களை முன்­னெ­டுத்­தாலும், இது­போன்ற சில பழ­மை­வா­திகள் கட்சி நவீனமாக மாறு­­வதை விரும்பவில்லை என்று ரணி­லுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த நவீன­மயமாக்கலுக்கு எதிராக அவர்கள் பல்வேறு சதித் திட்டங்களில் ஈடுபட ஆரம்­பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மூத்த உறுப்பினர்கள் சிலர் கட்சியில் தமக்கான இடத்தை இழந்து விடுவோம் என்ற அச்சத்­தினாலேயே இவ்வாறு புதியவர்க­ளுக்கு முன்­னுரிமை அளிக்கப்படுவதை எதிர்க்­கின்றனர்.

அடுத்த வாரம் ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் கட்சியின் சிறப்பு செயற்­குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த செயற்­குழுக் கூட்டத்தில் ஐக்கிய தேசி­யக் கட்சியின் தலைவர் ரணில் இந்த சிக்­கல் தொடர்பாக சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.

எதிர்க்­கட்சி­கள் பெரும்பான்மையைப் பெற்­றுள்ள உள்ளூ­­ராட்சி மன்றங்களில் ஆட்சிய­மைப்­பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்­பெற்று வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘நாய்களை குளிப்பாட்டுவதற்கு அழைத்துச் செல்வதைப் போன்று, விருப்பமில்லாமல் தான் சஜித் இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்­கின்றார்’ என பல எதிர்க்கட்சி எம்.பி.க்­கள் கூறினர்.

ஆரம்பத்தில் இந்த பேச்சுவார்த்தை­களிலிருந்து விலகி இருக்க முயன்ற சஜித் பிரேமதாசவுக்கு, பின்னர் வேறு எதுவும் செய்­வதற்கு வழியின்றி பேச்சுவார்த்தைகளில் பங்­கேற்க வேண்டியேற்பட்டது.

ஆனால், ரணில் அந்தப் பேச்சுவார்த்தைகள் எதிலும் பங்­கேற்காமலிருப்பதற்கு தீர்மானித்துள்ளார். எனினும் அவரது அனுமதியுடனும் வழிகாட்ட­லுடனும் அவரால் நியமிக்கப்பட்ட குழு பேச்சு­வார்த்தைகளை சிறப்பாக முன்னெ­டுத்துச் செல்கின்றது. இவற்றுக்கு மத்தியில் கட்சி­களுக்கு இடையில் பேச்சுவார்த்தையின் போது எழுந்த பிரச்சினைகள் குறித்து சம்பந்­தப்பட்ட கட்சிகளுடன் பேசித் தீர்ப்பதற்கு ரணில் நடவடிக்கை எடுத்திருந்தார்.

 

Share.
Leave A Reply