இலங்­கையின் தேசிய விமான சேவை நிறு­வ­ன­மான ஸ்ரீலங்கன் எயார்­லைன்­ஸுடன் புதி­தாக இணைந்­துள்ள எயார் பஸ் ரக விமானம் கடந்த புதன்­கி­ழமை (4) இலங்­கைக்கு கொண்­டு­ வரப்பட்டது.

பிரான்ஸின் தலை­நகர் பரி­ஸி­லி­ருந்து செவ்­வாய்க்­கி­ழமை மாலை புறப்­பட்ட அவ்­வி­மானம் புதன்­கி­ழமை காலை இலங்கை வான்­ப­ரப்பை வந்­த­டைந்­தது.

வட­மேற்கு திசை­யி­லி­ருந்து இலங்­கைக்கு வந்த அவ்­வி­மா­னத்தை கட்­டு­நா­யக்­க பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலையத்தில் தரை­யி­றக்­கு­வ­தற்கு முன்னர், அதை மேலும் தெற்கு நோக்கி பாணந்­து­றை ­வரை பறக்கச் செய்து பின்னர் சுமார் 1500 அடி உய­ரத்தில் தாழ்­வாக கொழும்­பு­ வரை கரை­யோ­ர­மாக பறக்கச் செய்­தது அர­சாங்கம்.

தாழ்­வாகப் பறந்த அவ்­வி­மா­னத்தை கண்­டு­ க­ளிப்­ப­தற்கும் படம் ­பி­டிப்­ப­தற்கும் மக்­க­ளுக்கு அர­சாங்கம் அழைப்பு விடுத்­தி­ருந்­தது. காலி­மு­கத்­திடல் உட்­பட கடற்­க­ரை­யோ­ர­மா­கவும் உயர்ந்த கட்­ட­டங்­க­ளி­லி­ருந்தும் பெரும் எண்­ணிக்­கை­யான மக்கள் அவ்­வி­மா­னத்தை பார்­வை­யிட்­டனர்.

அதே­வேளை, ஸ்ரீலங்கன் எயார்­லைன்ஸில் ஒரு விமா­னத்தை இணைப்­பது என்ன சாத­னையா, இதற்­குமுன் இவ்­வாறு விமானம் கொண்­டு­ வ­ரப்­ப­ட­வில்­லையா எதற்­காக இந்த கொண்­டாட்டம்? என எதிர்க்­கட்சி அர­சி­யல்­வா­தி­களில் பலர் உட்­பட மற்­றொரு தரப்­பினர் கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளனர்.

இவ்­வி­மானம் புத்தம் புதி­ய­ விமா­னம் அல்ல, அது சொந்­த­மாக அல்­லாமல் குத்­த­கைக்கே பெறப்­பட்­டுள்­ளது, இந்­நி­லையில் கொண்­டா­டு­வ­தற்கு என்ன இருக்­கி­றது என்­பதும் அவர்­களின் கேள்­வி­யாகும்.

பிரான்ஸை தள­மாகக் கொண்ட ‘எயார்பஸ்’ எனும் விமானத் தயா­ரிப்பு நிறு­வனம் தயா­ரிக்கும் ஏ330-–200 ரகத்தைச் சேர்ந்த விமா­னமே ஸ்ரீலங்கன் எயார்­லைன்ஸ் நிறு­வ­னத்தில் புதி­தாக இணைக்­கப்­பட்­டது. அகன்ற உட­ல­மைப்­பு­டைய இவ்­வி­மா­னத்தை மத்­திய தூர மற்றும் நீண்­ட ­தூர சேவை­க­ளுக்குப் பயன்­ப­டுத்த முடியும். 260 பய­ணி­கள் இவ்­வி­மா­னத்தில் பயணிக்க முடியும்.

ஸ்ரீலங்கன் எயார்­லைன்ஸ் நிறு­வ­னத்தில் தற்­போது புதி­தாக இணைந்த விமா­னத்துடன் நீண்ட தூர பய­ணத்­துக்கு ஏற்ற எயார்பஸ் ஏ330 ரகத்தைச் சேர்ந்த 10 விமா­னங்­களும், குறு­கிய உடலமைப்­பு­டைய, மத்­திய தூர பய­ணத்­துக்கு ஏற்ற எயார்பஸ் ஏ320 மற்றும் ஏ321 ரகங்­களைச் சேர்ந்த 13 விமா­னங்கள் உட்­பட மொத்­த­மாக 23 விமா­னங்கள் உள்­ளன. இவை அனைத்­துமே குத்­தகை அடிப்­ப­டையில் பெறப்­பட்­ட­வை­யாகும்.

இதற்­குமுன் அகன்ற உட­ல­மைப்­பு­டைய ஏ330-–200 ரக விமா­ன­மொன்று இறு­தி­யாக 2018 ஆம் ஆண்­டி­லேயே ஸ்ரீலங்கன் எயார்­லைன்ஸ் நிறு­வ­னத்தில் இணைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இம்­மாத மத்­தியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள மேற்படி ­வி­மானம் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதை சேவையில் இணைப்­ப­தற்கு சுமார் 10 நாட்கள் தேவைப்­ப­டலாம் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறு­வனத் தலைவர் சரத் கனே­கொட தெரிவித்துள்ளார்.

புதி­தாக எயார் பஸ் ரக விமானம் இணைக்கப்பட்­டமை இந்­நி­று­வ­னத்­துக்கு ஒரு மைல் கல் எனவும், இவ்­வ­ருட இறு­திக்குள் மேலும் இரு விமா­னங்­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக பல தரப்­பு­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடை­பெ­று­வ­தாகவும் அவர் கூறி­யுள்ளார்.

தேசிய விமான சேவை ஏன் தேவை?

ஒரு தேசிய விமான சேவை நிறு­வ­ன­மா­னது குறித்த நாட்டின் பெரு­மையை உள்­நாட்­டிலும் சர்­வ­தேச ரீதி­யா­கவும் ஊக்­கு­விக்கும் ஒன்­றாகும். அதை­விட சுற்­றுலா, வர்த்­தகம் போன்­ற­வற்­றுக்கு தேசிய விமான சேவை நிறு­வனம் முக்­கி­ய­மா­னது.

அர­சாங்­கத்தின் கட்­டுப்­பாட்டில் இத்­த­கைய நிறு­வனம் இருப்­ப­தா­னது, போக்­கு­வ­ரத்து உட்­கட்­ட­மைப்பு, தேசிய பாது­காப்பு போன்­ற­வற்­றுக்கு அனு­கூ­ல­மாகும். கொவிட் போன்ற பெருந்­தொற்று பர­வல்­க­ளின்­போது மக்­களை நாட்­டுக்கு அழைத்து வருதல், அவ­ச­ர­நிலை பதி­ல­ளிப்­புகள், இரா­ஜ­தந்­திர தேவைகள் போன்­ற­வற்­றுக்கும் இது உதவும்.

இலங்கை நீண்­ட­ கா­ல­மா­கவே தனது பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு சுற்­று­லாத்­து­றையில் அதிக கவனம் செலுத்­து­கி­றது. ஒரு தீவு நாடான இலங்­கை விமானப் பய­ணங்­களிலேயே அதிகம் தங்­கி­யுள்­ளது. சுற்­றுலா, வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு, ஏற்­று­மதி நட­வ­டிக்­கைகள் போன்­ற­வற்­றுக்கு விமான சேவைகள் முக்­கி­ய­மா­னவை. இதில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறு­வனம் பெரும்­பங்­காற்­று­கி­றது.

ஊழலும் நஷ்­டமும்

ஆனால், கடந்த காலங்­களில் தவ­றான முகா­மைத்­துவம், தவ­றான அர­சியல் தலை­யீ­டுகள் மற்றும் ஊழல்­களின் விளை­வாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறு­வனம் பெரும் பொரு­ளா­தார இழப்­பு­களை எதிர்­கொண்­டது.

யுத்­தத்தின் பின் 2013 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறு­வனம் இலா­ப­மீட்ட ஆரம்­பிக்கும் என எதிர்­பார்க்­கப்­பட்­டி­ருந்த போதிலும் அது தொடர்ந்தும் நஷ்­டத்தையே எதிர்­கொண்­டது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்­துக்­காக எயார்பஸ் ஏ350 ரகத்தின் 4 விமா­னங்­க­ளையும் ஏ330 ரகத்தின் 6 விமா­னங்­க­ளையும் கொள்வனவு செய்­வ­தற்கு 2013 ஆம் ஆண்டு கட்­டளை கொடுக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அவ்­வி­மா­னங்கள் இலங்­கைக்கு வர­வில்லை.

இவ்­வி­மானக் கொள்­வ­னவு முயற்­சி­களில் ஊழல் இடம்­பெற்­ற­தாக குற்­றச்­சாட்­டப்­பட்­டது. சந்தைப் பெறு­ம­தியை விட அதிக விலைக்கு விமா­னங்­களை வாங்­கு­வ­தற்­காக இலஞ்சம் பெற்­ற­தாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்தின் முன்னாள் பிர­தம நிறை­வேற்று அதி­காரி கபில சந்­தி­ர­சேன மீது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது.

2020 முற்பகுதியில் சந்திரசேனவும் அவரின் மனைவியும் கைதாகி பின்னர் பிணையில் விடு­த­லை­ செய்யப்பட்டனர். இந்த ஊழல் குற்­றச்­சாட்டு கார­ண­மா­க­ கபில சந்­தி­ர­சேனவும் அவரின் குடும்பத்தினரும் அமெ­ரிக்­கா­வுக்குள் நுழை­வ­தற்கு க­டந்த டிசம்பர் மாதம் அமெ­ரிக்க அரசு தடை விதித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

2018 ஆம் ஆண்டின் பின் முதல் தட­வை­யாக, ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ரம­சிங்­கவின் ஆட்­சிக்­கா­லத்தில் 2023 டிசம்­ப­ரிலும் 2024 ஜூனிலும் ஏ320 ரகத்­தி­லான இரு விமா­னங்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்தில் இணைக்­கப்­பட்­டி­ருந்­தன.

கடந்த வருட முற்­ப­கு­தியில், ஏ330 ரகத்­தி­லான 4 விமா­னங்­களை குத்­தகை அப்­ப­டையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்தில் இணைப்­ப­தற்கு ரணில் விக்­கி­ரம­சிங்க அர­சாங்கம் அனு­மதி அளித்­தது.

விமா­ன­மொன்­றுக்கு மாதாந்தம் 360,000 டொலர் அடிப்­ப­டையில் இரு விமானங்­கைள 6 வரு­டங்­க­ளுக்கு ஒரிக்ஸ் ஏவி­யேசன் நிறு­வ­னத்­துக்கு ஊடாக குத்­த­கைக்குப் பெறு­வ­தற்கும், விமா­ன­மொன்­றுக்கு மாதாந்தம் 365,000 டொலர்கள் அடிப்­ப­டையில் இரு விமா­னங்­களை 8 வரு­ட­ கா­லத்­துக்கு ஏர்கோ கெப்­பிட்டல் நிறு­வ­னத்­துக்கு ஊடாக குத்­த­கைக்குப் பெறு­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக கடந்த ஏப்ரல் மாதம் அப்­போ­தைய அமைச்­ச­ரவை பேச்­சாளர் பந்­துல குண­வர்­தன அறி­வித்­தி­ருந்தார். தற்­போது மேற்­படி ஒப்­பந்­தங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அதே­வேளை நட்­டத்தில் இயங்கி வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்தை விற்­பனை செய்­வ­தற்கும் அப்­போ­தைய அர­சாங்கம் முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்­தது.

ஆனால், கடந்த செப்­டெம்பர் மாதம் ஜனா­தி­ப­தி­யாக அநு­ர­கு­மார திசா­நா­யக்க பத­வி­யேற்­ற­வுடன் மேற்படி நிறு­வ­னத்தை விற்­பனை செய்யும் முந்­தைய அர­சாங்­கத்தின் திட்­டத்தை கைவி­டு­வ­தாக புதிய அர­சாங்கம் அறி­வித்­தது.

சுற்­று­லாத்­துறை அபி­வி­ருத்­திக்­காக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறு­வனம் அரசின் வசம் இருக்க வேண்­டு­மெனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்கம் தெரி­வித்­தது.

நிறு­வ­னத்தின் கடன்களை தீர்ப்பதற்காக , 20,000 கோடி ரூபாவை கடந்த வர­வு­–செ­ல­வுத்­திட்­டத்தில் அர­சாங்கம் ஒதுக்­கி­யது. அத்­துடன், இந்த தசாப்­தத்தின் இறு­திக்குள் சுற்­று­லாத்­துறை மூலம் 10 பில்­லியன் டொலர் வரு­மானம் ஈட்­டு­வ­தற்கு இலங்கை இலக்கு வைத்­துள்ள நிலையில், 5 வரு­டங்­களில் அதா­வது 2030 ஆம் ஆண்­டுக்குள் தனது விமா­னங்­களின் எண்­ணிக்­கையை 52 ஆக அதி­க­ரிப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்­ள­தாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறி­வித்­தது.

23 ஆவது விமானம்

இந்­நி­லை­யி­லேயே அந்­நி­று­வ­னத்­துக்­கான 23 ஆவது விமானம் கடந்த புதன்­கி­ழமை நாட்டை வந்­த­டைந்­தது.

242 சிக்­கன வகுப்புப் பய­ணிகள் ஆச­னங்கள் மற்றும் 18 வர்த்­தக வகுப்பு ஆச­னங்கள் உட்­பட 260 ஆச­னங்­களைக் கொண்ட இவ்­வி­மானம் ஒரே தட­வையில் சுமார் 13,400 கிலோ­மீற்றர் தூரம் பறக்­கக்­கூ­டி­யது. இதனால் இலங்­கை­யி­லி­ருந்து லண்டன், பிராங்க்போர்ட் (ஜேர்­மனி), மெல்பேர்ன் (அவுஸ்­தி­ரே­லியா) போன்ற இடங்­க­ளுக்­கான நேரடி விமான சேவை­களை நடத்­து­வ­தற்கு இவ்­வி­மா­னத்தை பயன்­ப­டுத்த முடியும்.

‘வயதும் அனு­ப­வமும்’

4R–-ALT என்ற அடை­யா­ளத்தைக் கொண்ட இவ்­வி­மானம் 2011 ஒக்­டோ­பரில் முதல் தவை­யாக பறந்­தது. இந்­தோ­னே­ஷி­யாவின் கருடா எயார்­லைன்ஸில் 2011 ஆம் ஆண்டு இணைத்­துக்­கொள்­ளப்­பட்ட இவ்­வி­மானம், 2022 முதல் 2023 மே வரை தென் கொரி­யாவின் பிளை கங்வோன் நிறு­வ­னத்தில் இணைந்­தி­ருந்­தது. இவ்­வி­மானம் 14 வருடம் பழை­மை­யா­னது என்­பது குறித்து சிலர் விமர்­சிக்­கின்­றனர்.

ஆனால், விமா­னங்­களைப் பொறுத்­த­வரை 14 வரு­டங்கள் என்­பது அவ்­வ­ளவு பழை­மை­யா­ன­தல்ல என நிபு­ணர்கள் கூறு­கின்­றனர். பரா­ம­ரிப்­பிலும் அதன் திறன் தங்­கி­யுள்­ளது. கன­டாவின் ‘நோலைனர் ஏவி­யேசன்’ விமான சேவை நிறு­வ­னத்­தி­லுள்ள போயிங் 737–-200 ரக விமா­ன­மொன்று 1974 ஆம் ஆண்டு முதல் 50 வரு­டங்­க­ளுக்கு மேலாக இன்னும் சேவையில் உள்­ளது.

‘இத்­த­கைய விமா­னங்­களை நாம் வய­து­போன விமா­னங்கள் எனக் கூற விரும்­பு­வ­தில்லை. அவை அனு­பவம் மிக்க விமா­னங்கள் என்றே நாம் கூறு­கிறோம்’ என நோலைனர் ஏவி­யேசன் நிறு­வனத் தலைவர் மார்கோ புரூட்ஹோம் கூறி­யுள்ளார்.

வராத விமா­னத்­துக்கு 800,000 டொலர்

இலங்கைப் பாரா­ளு­மன்­றத்தில் கடந்த 5 ஆம் திகதி ஐ.ம.ச. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கிங்ஸ் நெல்சன் எழுப்­பிய கேள்­வி­யொன்­றுக்கு பதி­ல­ளித்த போக்­கு­வ­ரத்து, விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்­நா­யக்க, இந்த விமானம் ஏற்­கெ­னவே பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்­பது உண்மை என்­ற­போ­திலும், மிகவும் நல்ல முறையில் சீர­மைத்தே அதை கொண்­டு­ வந்­தி­ருக்­கிறோம் விமா­னத்தின் தரம் தொடர்பில் எவ்­வித பிரச்­சி­னையும் இல்லை எனவும் கூறி­யுள்ளார்.

புதி­தாக கொண்­டு­வ­ரப்­பட்ட விமா­னத்­துக்­காக மாதாந்தம் 275,000 டொலர் குத்­தகை செலுத்­தப்­பட வேண்­டு­மெ­னவும், ஆனால், முந்­தைய நிர்­வாக காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட மோச­டி­யான ஒப்­பந்தம் கார­ண­மாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்­துக்கு விநி­யோ­கிக்­க­வே­ப­டாத விமா­னத்­துக்­கான ஒப்பந்தத்தினால் மாதாந்தம் 800,000 டொலர்­களை செலுத்த வேண்­டி­ய நிலை அர­சாங்­கத்­துக்கு ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் அமைச்சர் பிமல் ரத்­நா­யக்க கூறினார்.

இதே­வேளை கடந்த 5 ஆம் திகதி கொழும்­பி­லி­ருந்து சிங்­கப்பூர் நோக்கிப் புறப்­பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்தின் யூஎல் 306 எனும் விமா­னத்தில் ஏற்­பட்ட கோளாறு கார­ண­மாக அவ்விமானம் இந்தோனேஷியாவின் மேடான் நகரிலுள்ள விமான நிலையத்தில் அவசரமாக தறையிறக்கப்பட்டது.

இதனால் அவ்விமானத்திலிருந்த பயணிகள் பெரும் நெருக்­க­டிக்­குள்­ளா­னார்கள். பின்னர் மேற்­படி பய­ணி­களை சிங்­கப்­பூ­ருக்கு அழைத்துச் செல்­வ­தற்­காக ஸ்ரீலங்­கன் எயார்லைன்ஸின் யூ.எல். 302 எனும் விமா­னம் ­க­டந்த வெள்­ளிக்­கி­ழமை கொழும்­பி­லி­ருந்து அனுப்­பப்­பட்­டது.

ஆனால் சமூக வலை­த­ளங்­களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்தில் புதி­தாக இணைக்­கப்­பட்ட விமா­னத்தின் முதல் பய­ணத்­தி­லேயே கோளாறு ஏற்­பட்டு விட்­டதா என்ற ரீதியில் விஷ­மத்­த­ன­மாக பதி­வு­களை வெளி­யிட்­டி­ருந்­தனர்.

ஆனால் இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ச­ர­மாக தரையிறக்கப்பட்ட யூ.எல்306 விமானமானது புதிதாக இணைக்கப்பட்ட விமானமல்ல. அது ஏ321 ரகத்தைச் சேர்ந்த வேறொரு விமானமாகும்.

-ஆர்.சேதுராமன்-

Share.
Leave A Reply