யாழ்ப்பாணத்தில் கணவன் மனைவி இருவரும் இணைந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் கணவன் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

பருத்தித்துறை பகுதியில் இளைஞர்களை குறிவைத்து கணவன் மனைவி ஆகியோர் கஞ்சா மற்றும் ஐஸ் போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக காவற்துறை புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதன் அடிப்படையில் காவற்துறைனர் மேற்கொண்ட விசாரணைகளில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபர் 12 கிராம் 40 மில்லி கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது மனைவியும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் , மனைவி தலைமறைவாகியுள்ளார்.

மனைவியை கைது செய்வதற்கு காவற்துறைனர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் , கைது செய்யப்பட்ட நபரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Share.
Leave A Reply