மரணத்தின் பிடியிலிருந்து உயிர் தப்பிய தம்பதி… கண்ணிமைக்கும் நேரத்தில் வெடித்து சிதறிய எல்.பி.ஜி. சிலிண்டர்!

வீட்டில் ஏற்பட்ட LPG சிலிண்டர் கசிவு காரணமாக ஏற்பட்ட பயங்கர விபத்தில் தம்பதி நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர். இந்த பரபரப்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் நடந்த சரியான இடம் தெரியவில்லை என்றாலும், சிசிடிவி காட்சியில் உள்ள நேரம், இது ஜூன் 18, புதன்கிழமை அன்று பிற்பகல் 3 மணியளவில் நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சிசிடிவி காட்சியில், கிச்சன் ரூமில் இருந்து சிகப்பு நிற எல்.பி.ஜி சிலிண்டர் ஒன்று கிடப்பதும், அதிலிருந்து கேஸ் கசிந்து கொண்டிருப்பதும் பதிவாகியுள்ளது. பெண் ஒருவர் நிலைமையைக் கட்டுப்படுத்த முயல்கிறார். ஆனால், கசிவை நிறுத்த முடியாமல், போராடினார்.

இருவரும் தனித்தனி கதவுகள் வழியாக உள்ளே நுழைந்து, எரிவாயு வால்வை மூட முயற்சிக்கின்றனர்.

இருவரும் சிலிண்டருக்கு அருகில் வேலை செய்த பிறகு, சமையலறை அடுப்பிலிருந்து திடீரென பெரிய வெடிப்பு ஏற்படுகிறது. கண் இமைக்கும் நேரத்தில், தீப்பிழம்புகள் அறை முழுவதும் பரவி, புகை மற்றும் தீயால் நிரம்பியது.

நல்லவேளையாக, அந்தப்பெண் அனைத்து கதவுகளையும், ஜன்னல்களையும் திறந்து வைத்திருந்தார்.

இது பெரும்பாலான கேஸ் வெளியேற உதவியதுடன், சேதத்தையும் குறைத்து, அவர்களின் உயிரைக் காப்பாற்றியது. தீப்பிழம்புகள் வெடித்தவுடன், இருவரும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி, இந்த விபத்திலிருந்து உயிர் தப்பினர்.

Share.
Leave A Reply