கருப்பழகி பிரிவில் உலக அழகி பட்டம் வென்ற புதுச்சேரி மாடல், சான் ரேச்சல். காதல் திருமணம் செய்த ஓராண்டில் தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவர் கடைசியாக எழுதிய கடிதமும் சிக்கியிருக்கிறது.
புதுச்சேரி அழகி:
நிலையில், புதுவை மாடல் அழகி எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. புதுச்சேரி காரமணிக்குப்பம் மாரியம்மன் நகரை சேர்ந்த காந்தி என்பவரது மகள் சங்கரபிரியா என்கிற சான்ரேச்சல்.
இளம் பெண்ணான இவர் மாடலிங் துறையில் கால் பதித்து சிறப்பான முன்னுதாரணமாக இருந்து வந்தார். இந்தியா மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளில் நடைபெற்ற அழகி போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்திருந்தார்.
அழகிப்போட்டியில் பல்வேறு விருதுகளை வென்ற சான்ரேச்சல், கருப்பு நிறம் கொண்டவர். மாடலிங் துறையில் மிஸ் புதுச்சேரி 2020, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, Queen of madras 2022, 2023 MISS AFRICA GOLDEN INDIA போட்டியில் இரண்டாவது இடம் என பல விருதுகளை பெற்றுள்ளார்.
1 ஆண்டுக்கு முன் திருமணம்:
ரேச்சல், புதுவை 100 அடி ரோடு ஜான்சி நகரை சேர்ந்த சத்யா என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். அவர் திருமணம் செய்து கொண்டதை அடுத்து, செலவுக்காக பலரிடம் லட்ச்சக்கணக்கில் கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
தற்கொலை!
சம்பவத்தன்று இரவு கணவன் வீட்டில் இருந்த சான்ரேச்சல் தனது தந்தை காந்திக்கு போன் செய்துள்ளார்.
அவரிடம், தான் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை மற்றும் ரத்த அழுத்த மாத்திரைகளை தின்று விட்டு முடிவைத் தேடிக்கொள்வதாக கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காந்தி, உடனடியாக தனது மகள் வீட்டுக்கு விரைந்துள்ளார்.
அங்கு மயங்கிக் கிடந்த சான்ரேச்சலை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சான்ரேச்சல் பரிதாபமாக உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சான்ரேச்சல் தற்கொலைக்கு, பேஷன் ஷோ நடத்தியதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவருக்கு திருமணம் ஆகி ஓராண்டே ஆவதால், தாசில்தார் விசாரணையும் நடந்து வருகிறது.
சிக்கிய கடிதம்..!
இதனிடையே, மாடல் அழகி சான்ரேச்சல் தற்கொலைக்கு முன்பு அவர் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் கிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கணவர், தந்தை மற்றும் மாமியார் ஆகியோருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியிருந்தார்.
அதில், தனது குடும்பத்திற்கு தெரியாமல் அதிக அளவில் கடன் வாங்கினேன் – அந்த கடனை தன்னால் திரும்ப செலுத்த முடியவில்லை – உறவினர்கள் உதவுவார்கள் என்று எண்ணினேன் – ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை – எனவே விபரீத முடிவை தேடிக் கொள்கிறேன் – என்னை அனைவரும் மன்னித்து விடுங்கள் – எனது சாவுக்கு யாரும் காரணமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட சான்ரேச்சல், கடன் தொல்லையால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் கூறுகின்றனர். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.