திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்றாம் கட்டை பகுதியில் உயிரிழந்த நிலையில் இளைஞரொருவரின் சடலம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (03) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்துள்ளவர் திருகோணமலை மடத்தடி கிருஷ்ணன் கோயில் வீதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் நான்காம் கட்டையைச் சேர்ந்த ஆறுபேர் தலைமையகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply