சென்னை: சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொழில் அதிபருடன் இரவு முழுக்க தங்கிய தீபிகா என்ற இளம்பெண் நள்ளிரவில் செய்த செயல் அவரை சிறையில் தள்ளியுள்ளது.

போதையில் மயங்கி தூங்கிய தொழில் அதிபரின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு இரவோடு இரவாக தப்பிச்சென்ற தீபிகாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகின. பல ஆண்களை இதே பாணியில் ஏமாற்றி பணம் பறித்ததாகவும், இப்போது தான் மாட்டிவிட்டேன் என்றும் தீபிகா கூறியிருக்கிறார்.

சென்னையில் ஹோட்டலில் தொழிலதிபருடன் இரவு முழுக்க தங்கிவிட்டு காலையில் நகையுடன் எஸ்கேப் ஆன இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்ட தகவல்கள் வருமாறு:-

யாருக்கும் தெரியாமல் எஸ்கேப்

சென்னை ஆவடி அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணி. 47 வயதான இவர் தொழில் அதிபர் ஆவார்.

சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்து தனது தோழி தீபிகாவுடன் மணி தங்கினார்.

இருவரும் இரவில் மது அருந்தியதாக சொல்லப்படுகிறது. இரவில் மது மயக்கத்தில் மணி உறங்கிய நிலையில், அவரது தோழியான தீபிகா காலையில் யாருக்கும் தெரியாமல் எஸ்கேப் ஆகியுள்ளார்.

தீபிகாவின் காதலனும் கைது

இரவு முழுக்க தங்கியிருந்தவரை திடீரென காணவில்லை என தேடிய மணிக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.

தன்னுடைய 10 பவுன் தங்க சங்கிலியும் காணாமல் போயிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மணி புகார் கொடுத்திருந்தார்.

இதுதொடர்பாக தேனாம்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடியதாக தீபிகாவை கைது செய்தனர்.

தீபிகாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், திருடிய தங்க சங்கிலியை தனது காதலன் சதிஷ்குமார் (வயது 24) உடன் சேர்ந்து ரூ.7 லட்சத்திற்கு விற்றது தெரியவந்தது.

நகையை விற்று கிடைத்த பணத்தில் தனது காதலனுக்கு பைக் வாங்கி கொடுத்துளார். மீதமுள்ள பணத்தை செலவு செய்வதற்காக இருவரும் வைத்து இருந்துள்ளனர்.

இதையடுத்து, பணம் மற்றும் பைக், விற்பனை செய்யபப்ட்ட நகையையும் மீட்ட போலீசார், திருட்டுக்கு உதவியாக இருந்த காதலன் சதீஷ்குமாரையும் கைது செய்தனர்.

முதல் முறையாக மாட்டிக்கொண்டேன்

பின்னர் தீபிகாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளாராம்.

தீபிகா கூறியதாவது:- பெற்றோரை பிரிந்து தனியாக வாழும் எனக்கு 17 வயதில் திருமணம் ஆகிவிட்டது. கணவர் தற்போது உடன் இல்லை. 4 வயதில் ஒரு மகன் உள்ளான்

. எனக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள். மணியை நான் ஹோட்டலில் சந்தித்தேன். ஒன்றாக மது அருந்தினோம். இரவில் போதை மயக்கத்தில் மணி மயங்கி விட்டார்.

இதுதான் சரியான சமயம் என நான் மணியிடம் இருந்த தங்க சங்கிலியை திருடிச்சென்றேன். எனது பாய் பிரண்டு பலரை இப்படி ஏமாற்றியிருக்கிறேன்.

யாரும் புகார் கொடுக்காததால் மாட்டாமல் இருந்தேன். ஆனால், தற்போது முதல் முறையாக மாட்டிக்கொண்டேன்’ என்று கூறியிருக்கிறார். இந்த தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒழுக்கம் தவறினான் இது தான் நிலைமை

தீபிகாவையும் அவரது காதலன் சதீஷ்குமாரும் நீதிமன்றக்காவலில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தனக்கு திருமணம் ஆகவில்லை எனக் கூறி ஒவ்வொரு நபரிடம் பழகிய தீபிகா நகை, பணம் திருடி பல உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார். ஒழுக்கம் தவறியதால் தற்போது இளம் வயதிலேயே சிறையில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் தீபிகா.

 

Share.
Leave A Reply