கடந்த 22 மாதங்­க­ளுக்கு மேலாக இங்­கி­லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜேர்­ம­னியின் ஆத­ர­வுடன் பலஸ்­தீ­னர்­களை அமெ­ரிக்­காவும் -இஸ்­ரேலும் இனப்­ப­டு­கொலை செய்ய அரபு சர்­வா­தி­கா­ரிகள் உதவி வரு­கின்­றனர்.

இந்த சர்­வா­தி­கா­ரிகள் தங்கள் அர­சியல் இருப்­புக்­காக அமெ­ரிக்­கா­வையும் இஸ்­ரே­லை­யும் நம்­பி­யி­ருப்­பது, அவர்­க­ளது மக்­களின் கோபத்தை தூண்டி உள்­ள­துடன், அவர்­களின் ஆட்­சிகள் இன்று அச்­சு­றுத்­த­லுக்கும் ஆளா­கி­யுள்­ளன.

காஸாவில் அமெ­ரிக்­க-­ இஸ்­ரே­லிய இனப்­ப­டு­கொ­லையின் வர­லாறு எழு­தப்­படும் ஒரு நாள் வரும் போது அன்று அரபு சர்­வா­தி­கா­ரி­களின் பங்கு மிக மோச­மான துரோ­க­மாக எழு­தப்­படும்.

இன்­றைய காலத்தின் தேவை ஜெரு­ச­லேமைக் கைப்­பற்ற ஒட்­ட­கத்தில் தனது பணி­யா­ள­னுடன் சென்ற உமர் போன்ற ஒரு கலீ­பாவின் தலை­மைத்­து­வமே அன்றி, தமது சுய இருப்­புக்­காக முஸ்லிம்­க­ளுக்கு எதி­ரான தீய நிகழ்ச்சி நிரல்­க­ளுடன் உள்ள அமெ­ரிக்­கா­வையும் இஸ்­ரே­லையும் நம்­பி­யி­ருக்கும் மற்றும் அவர்­க­ளோடு கை கோர்க்கும் ஆட்­சி­யா­ளர்கள் அல்ல.

தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­க­ளிலும் சமூக ஊட­கங்­க­ளிலும் உல­கெங்­கிலும் உள்ள மக்கள் காஸாவில் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்ள காட்­டு­மி­ராண்­டித்­த­னத்தை 24 மணி நேரமும் பார்க்கின்­றார்கள்.

2023 அக்­டோபர் 8 முதல் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட இந்த கொடுமை, பலஸ்­தீ­னர்­களைக் கொல்­வதற்கும் பட்­டி­னியால் வாட்­டு­வ­தற்கும் முற்­றுப்­புள்ளி வைக்கக் கோரி உல­கெங்­கிலும் உள்ள இலட்­சக்­க­ணக்­கான மக்­களை உசுப்பி விட்­டுள்­ளது.

இத்­த­கைய அமை­தி­யான ஆர்ப்­பாட்­டத்­துக்கு கூட மத்­திய கிழக்கில் அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை. உண்­மையில் காஸாவில் பாதிக்­கப்­பட்ட பலஸ்­தீ­னர்­க­ளுக்­காக பிரார்த்­தனை செய்­வது கூட இஸ்­லாத்தின் பிறப்­பி­ட­மான சவூதி அரே­பி­யாவில் தடை செய்­யப்­பட்­டுள்­ளது.

உதா­ர­ண­மாக, அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், 2017 டிசம்பர் 6 ஆம் திகதி ஜெருசலேமை இஸ்­ரேலின் தலை­ந­க­ராக அதி­கா­ரபூர்வமாக அங்­கீ­க­ரித்து, அமெ­ரிக்க இரா­ஜ­தந்­திர பணியை டெல் அவி­வி­லி­ருந்து ஜெரு­ச­லே­முக்கு மாற்­றினார்.

ஜெரு­ச­லேமில் உள்ள மஸ்ஜித் அல் அக்­ஸாவை தொழு­கைக்கு தங்கள் முதல் கிப்லா திசை­யாக கருதும் உல­கெங்­கிலும் உள்ள முஸ்­லிம்­க­ளுக்கு இது ஒரு வர­லாற்று ரீதி­யா­ன­அ­வ­மா­ன­மாகும்.

2020 ஆம் ஆண்டில் கையெ­ழுத்­தி­டப்­பட்ட ஆபி­ரகாம் உடன்­ப­டிக்­கைகள், பல்­வேறு அமெ­ரிக்க ஆத­ர­வு­க­ளுக்கு ஈடாக இஸ்லாம் மற்றும் அவர்­களின் ஒடுக்­கப்­பட்ட மக்­களை அவ­ம­திப்­பதை அரபு அர­சாங்­கங்கள் உறு­திப்­ப­டுத்தி உள்­ளன.

இப்­போது ஜனா­தி­பதி ட்ரம்ப் காஸாவில் பலஸ்­தீ­னர்­களை படு­கொலை செய்­வதில் இஸ்­ரே­லுடன் ஒரு பங்­கா­ளி­யாக இருக்­கின்றார்.

இஸ்லாம் மற்றும் முஸ்­லிம்கள் மீதான அவ­ரது அனைத்து விரோ­தங்­களும் அப்­ப­டியே இருந்­த­போ­திலும், அரபு சர்­வா­தி­கா­ரி­க­ளான சவூதி அரே­பியா, கத்தார் மற்றும் ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் என்­பன அண்­மையில் ட்ரம்ப் தமது நாடு­க­ளுக்கு மேற்­கொண்ட விஜ­யங்­களின் போது அவ­ருக்கு கிட்­டத்­தட்ட ஒரு பில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான வர­வேற்பை வழங்­கின.

சவூதி அரே­பியா, ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஆகிய நாடு­க­ளுடன் சுமார் 2 ட்ரில்­லியன் டொலர் மதிப்­புள்ள முத­லீட்டு ஒப்­பந்­தங்­க­ளையும் அவர் செய்­து­கொண்டார்.

இதுவும் உல­கெங்­கிலும் உள்ள முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு வர­லாற்று அவ­மா­ன­மாகும்.

அமெ­ரிக்கா ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் என்­பன மத்­திய கிழக்கில் ஜன­நா­ய­கத்தை ஒரு­போதும் பொறுத்துக் கொள்ளப் போவ­தில்லை.

உதா­ர­ணத்­துக்கு எகிப்தில் 60 ஆண்­டு­களில் முதல் முறை­யாக நடை­பெற்ற சுதந்­தி­ர­மான மற்றும் நியா­ய­மான தேர்­தல்­களில் முஸ்லிம் சகோ­த­ரத்­து­வத்­துவ அமைப்­பிற்கு ஆத­ர­வான முக­மது முர்சி தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார்.

இதன் மூலம் எகிப்­தி­யர்கள் சர்­வா­தி­காரம் முடி­வுக்கு வந்­ததைக் கண்டு மகிழ்ச்சி அடைந்­தனர்.

ஆனால், இந்தத் தெரி­வுக்கு எதி­ராக அமெ­ரிக்­கா-­ ஐ­ரோப்பா மற்றும் இஸ்­ரேலில் எச்­ச­ரிக்கை மணிகள் அடிக்கத் தொடங்­கின.

அவர்கள் தங்கள் சவூதி, குவைத் மற்றும் ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் கைப்­பொம்மை ஆட்­சி­யா­ளர்­களைத் தூண்டி அவர்கள் மூலம் எகிப்­திய மக்கள் மத்­தியில் செயற்­கை­யாக உணவு மற்றும் எரி­பொருள் பற்­றாக்­கு­றையை உரு­வாக்க பதி­னொரு பில்­லியன் டொலர்­களை செல­விட வைத்­தனர்.

இது மக்கள் மத்­தியில் கிளர்ச்­சிக்கு வழி­வ­குத்­தது. அதன் விளை­வாக முர்சி அர­சாங்கம் கவிழ்ந்­தது. அமெ­ரிக்­க-­, இஸ்­ரே­லிய நலன்­க­ளுக்கு சேவை செய்­வ­தற்­காக இந்த சதித்­திட்­டத்தை அமுல் செய்­த­வர்கள் உட­ன­டி­யாக தங்­க­ளுக்கு சார்­பான இரா­ணுவ சர்­வா­தி­காரி அப்துல் பத்தாஹ் அல் சிசியை அதி­கா­ரத்தில் அமர்த்­தினர்.

இன்று சிசியின் கொடுங்கோல் ஆட்சி அமெ­ரிக்­காவால் ஆண்­டுக்கு 1.3 பில்­லியன் டொலர் செலவில் பரா­ம­ரிக்­கப்­ப­டு­கி­றது.

பதி­லுக்கு சிசி, இஸ்லாம் மற்றும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான அமெ­ரிக்­க-­- இஸ்­ரே­லிய சதித்­திட்­டங்­க­ளையும் காஸாவில் நடக்கும் இனப்­ப­டு­கொ­லை­க­ளையும் கீழ்ப்­ப­டி­த­லுடன் ஆத­ரிக்­கிறார்.

காஸாவில் இஸ்­ரேலின் “இனப்­ப­டு­கொலை பட்­டி­னியை” கண்­டிக்கும் வகையில் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையை திரும்பப் பெறு­மாறு உலகின் முன்­னணி இஸ்­லா­மிய நிறு­வ­ன­மான அல் அஸ்­ஹரின் பிர­தம இமாம் அக­மது அல்-­தய்­யிப்­புக்கு சிசி அழுத்தம் கொடுத்­துள்ளார்.

சவூதி மற்றும் ஐக்­கிய அரபு அமீ­ரகம் என்­பன பல பில்­லியன் டொலர் கூட்டு முத­லீட்டு திட்­டங்­களை உள்­ள­டக்கி இஸ்­ரே­லுடன் நெருங்­கிய இரக­சிய உற­வு­களை பேணி வரு­கின்­றன. சூடா­னிலும் உள்­நாட்டுப் போரைத் தூண்­டிய அபு­தாபி, இஸ்­ரே­லி­யர்­க­ளுக்கு பக்க பல­மாக உள்­ளது.

இந்தப் பிர­தே­சத்தில் மக்கள் புரட்­சிகள் வெடித்து ஒரு தசாப்தத்துக்கும் சற்று அதி­க­மான காலம் கழிந்­துள்ள நிலையில் பல­வீ­ன­மான அர­சு­களே எஞ்சி உள்­ளன.

இன்று அரபு ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கும் அவர்­களின் மக்­க­ளுக்கும் இடை­யி­லான இடை­வெளி இதற்கு முன் ஒரு­போதும் இந்­த­ளவு விரி­வா­ன­தாக இருந்­த­தில்லை. இது நீண்ட காலத்­திற்கு சகித்துக் கொள்ளக் கூடி­யதும் அல்ல.

இதற்­கி­டையில் எகிப்து, ஜோர்டான், சிரியா, கத்தார், சவூதி அரே­பியா, பஹ்ரைன் மற்றும் ஐக்­கிய அரபு அமீ­ரகம் ஆகி­யவை ஈரான் மீதான சமீ­பத்­திய தாக்­கு­தல்­களில் இஸ்­ரே­லுக்கு ஆத­ர­வ­ளித்­த­தாக செய்­திகள் தற்­போது வெளி வரு­கின்­றன. இது ஈரானைத் தூண்டும் ஒரு ஆபத்­தான நிலை­மை­யாகும். இது முழு பிராந்­தி­யத்­தையும் பொசுக்கக் கூடும்.

சமீ­பத்­திய நிகழ்­வுகள் மக்கள் அணி­தி­ரட்­ட­லுக்­கான வாய்ப்­புகள் குறித்து நீண்ட கால­மாக புதைக்­கப்­பட்­டி­ருந்த கேள்­வி­களை மீண்டும் எழுப்பி உள்­ளன. ஆனால் இந்தக் கேள்­வி­க­ளுக்கு பிராந்­தி­யத்தின் எதோச்­ச­தி­கா­ரிகள் இன்னும் அதிக அடக்­கு­மு­றை­யுடன் தான் பதி­ல­ளித்து வரு­கின்­றனர்.

பல வளை­குடா நாடு­களில் பலஸ்­தீன கொடி­களை அசைப்­பது மற்றும் அவர்­களின் சால்­வையை அணி­வது என்­பன கண்­டிப்­பாக தடை செய்­யப்­பட்­டுள்­ளன.

பலஸ்­தீ­னர்­க­ளுக்கு ஆத­ர­வாக செய்­யப்­படும் பிரார்த்­த­னைகள் கூட சவூ­தியின் புனித மக்கா நகரில் காவல் துறை­யி­னரால் தடுக்­கப்­பட்­டுள்­ளன. இந்த விஷ­யத்தின் உண்மை நிலை என்­ன­வென்றால், அரபு ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கும் அவர்­களின் மக்­க­ளுக்கும் இடை­யி­லான இடை­வெளி ஒரு­போதும் இந்­த­ளவு விரி­வா­ன­தாக இருந்­த­தில்லை.

பிரேஸில், பொலி­வியா, சிலி மற்றும் கொலம்­பியா போன்ற லத்தீன் அமெ­ரிக்க நாடுகள் தங்கள் தூதர்­களை திரும்ப அழைத்தும், அல்­லது சியோ­னிச அர­சு­ட­னான இரா­ஜ­தந்­திர உற­வு­களை துண்­டித்தும் அல்­லது குறைத்தும் உள்ள போதிலும் சுற்றி உள்ள அரபு நாடு­களோ இஸ்­ரே­லுடன் உற­வு­களை “இயல்­பாக்கி ” உள்­ள­னவே தவி­ர­ வேறு ஒன்றும் செய்­ய­வில்லை.

உலக அதி­ச­யங்கள் என்ற தலைப்பில் ஒரு கட்­டு­ரையில்! டாக்டர் மஹ்பூப் ஏ கவாஜா அரே­பி­யர்கள் எங்கே இருக்­கின்­றார்கள்? என்ற கேள்­வியை எழுப்பி உள்ளார்.

“அரபு தார்­மீக, அறி­வார்ந்த மற்றும் அர­சியல் நடத்­தையில் இத்­த­கைய சீர­ழிந்த கலா­சா­ரத்தை வர­லாறு ஒரு போதும் கண்­ட­தில்லை. எதி­ரி­க­ளுக்கும் நண்­பர்­க­ளுக்கும் இடை­யி­லான வேறு­பாட்டை அவர்கள் வாழும் வர­லாற்­றி­லி­ருந்து எப்­போது இவர்கள் கற்­றுக்­கொள்­வார்கள்?

ஆச்­ச­ரியம் என்­ன­வென்றால், சில முஸ்லிம் அல்­லா­த­வர்­களால் முஸ்­லிம்­களை விட அதி­க­மாக செய்ய முடிந்­துள்­ளது.

ஐ.சி.சி யில் இஸ்­ரே­லிய போர்க் குற்­ற­வா­ளிக்கு எதி­ரான வழக்கு தென்­ ஆபிரிக்கா போன்ற ஒரு முஸ்லிம் அல்­லாத அரசால் தான் பதிவு செய்­யப்­பட்­டது.

சவூதி அரே­பியா, இந்­தோ­னே­சியா, துருக்கி அல்­லது பாகிஸ்தான் இதை செய்­ய­வில்லை. இஸ்­ரே­லுக்கு எதி­ரான மிகப்­பெ­ரிய எதிர்ப்பு பேர­ணிகள் லண்டன், பாரிஸ் மற்றும் ரோம், .ெவாஷிங்­டனில் நடத்­தப்­ப­டு­கின்­றன. ரியாத், கெய்ரோ, இஸ்­தான்புல் அல்­லது கராச்­சி­யிலோ அல்ல.

இஸ்­ரே­லிய காட்­டு­மி­ராண்­டித்­த­னத்தால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு எந்த வகை­யான கண்­ட­னமும் உதவப் போவ­தில்லை. சில நடை­முறை நட­வ­டிக்­கைகள் தான் இதற்கு தேவை. ஒவ்­வொரு முஸ்­லிமும் பலஸ்­தீ­னர்­க­ளுக்கு உத­வு­வதில் தனது பங்கை வகிப்­ப­தற்­கான வழியைக் கண்­டு­பி­டிக்க வேண்டும் என்று டாக்டர் மஹ்பூப் ஏ. கவாஜா தெரிவித்துள்ளார்.

லத்தீப் பாரூக்

Share.
Leave A Reply