நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான இன்றைய தினம் சனிக்கிழமை காலை சூர்யோற்சவம் நடைபெற்றது.
காலை 6.45 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா வந்ததைத் தொடர்ந்து வெளி வீதியுலாவும் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.