குருணாகலில் கொபேய்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெல்லகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொபேய்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை 907) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொபேய்கனை, மெல்லகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய திருமணமாகாத நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொபேய்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.