யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நுணாவில் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை வீதியில் வாகனம் ஒன்றினை முந்தி செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டி , எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில் , மற்றைய மோட்டார் சைக்கிள் ஓட்டி படுகாயமடைந்த நிலையில் , சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Share.
Leave A Reply