வாகனத்தை உங்கள் (பொலிசாரின்) தலையிலா நிறுத்துவது? என விசர் கேள்வி கேட்ட அர்சுனா கைது.

புறக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக இன்று காலை சென்ற பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா புறக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றியமையையடுத்து புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரியொருவரை அவதூறுக்குள்ளாக்கியதாக காணொளிகள் வெளியாகிய சம்பவத்தையடுத்தே இக்கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் விசாரணையொன்றின் அங்கமொன்றாகவே கைது இடம்ம்பெற்றதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் வந்த வாகனத்தை, பாதசாரிகள் கடவையில் நிறுத்தியுள்ளார். அப்போது அங்கிருந்த போக்குவரத்து பொலிஸார், வாகனத்தை இவ்விடத்தில் நிறுத்தக்கூடாது என கூறியுள்ளார்.

அப்போது, வாகனத்தை இங்கு நிறுத்தாமல் உங்கள் தலையிலா நிறுத்துவது என அர்ச்சுனா கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்தி

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிப்பு

Share.
Leave A Reply