இலங்கை பிள­வு­ப­டு­வதை தடுப்­ப­தற்கும் தமி­ழர்­களின் ஆயுத போராட்­டத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­குமே, இந்­திய – இலங்கை ஒப்­பந்தம் செய்து கொள்­ளப்­பட்­ட­தா­கவும், இந்­திய இரா­ணுவம் இலங்­கையில் நிறுத்­தப்­பட்­ட­தா­கவும் – முன்னாள் இந்­திய மத்­திய அமைச்சர் மணி­சங்கர் ஐயர் ஒப்புக் கொண்­டி­ருக்­கிறார்.

புது­டெல்­லியில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை “இந்­தி­யாவின் எதிர்­கா­லத்­திற்­காக, ராஜீவ் காந்­தியின் பாரம்­ப­ரி­யத்தை மறு மதிப்­பீடு செய்தல்” என்ற தொனிப்­பொ­ருளில் இடம்­பெற்ற கருத்­த­ரங்கில் உரை­யாற்­றிய போதே, அவர் இதனைக் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். அவ­ரது இந்தக் கருத்து முக்­கி­ய­மான ஒரு வாக்­கு­மூலம்.

மணி­சங்கர் ஐயர்

மணி­சங்கர் ஐயர் காங்­கிரஸ் கட்­சியின் மூத்த உறுப்­பி­னர்­களில் ஒருவர். துறைசார் இரா­ஜ­தந்­திரி.

மயி­லா­டு­துறை தொகு­தியில் மூன்று முறை பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தெரி­வா­கி­யவர். ராஜ்­ய­ச­பா­விலும் உறுப்­பி­ன­ராக இருந்­தவர்.

இவற்­றுக்கு அப்பால், ராஜீவ் காந்­தியின் மிக நெருக்­க­மான நண்பர். அவ­ரது குடும்ப நண்­ப­ராக இருந்­தவர்.

ராஜீவ் காந்தி அர­சி­ய­லுக்கு வரு­வ­தற்கு முன்­னரே, அவ­ருடன் நெருங்கிப் பழ­கி­யவர் என்ற வகை­யிலும், அவர் பிர­த­ம­ரா­கவும் அதற்குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தி­யிலும் அவ­ருடன் நெருக்­க­மாக இருந்­தவர் என்ற வகை­யிலும் மணி­சங்கர் ஐயரின் இந்தக் கருத்து முக்­கி­ய­மா­னது.

கிட்­டத்­தட்ட ராஜீவ் காந்­தியின் வாயால் ஒப்­புதல் வாக்­கு­மூலம் வழங்­கு­வது போன்­றது.

1987இல் இந்­திய – – இலங்கை ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது ஏன் என்ற விட­யத்தில் மாறு­பட்ட கருத்­துக்கள் உள்­ளன.

அந்த உடன்­பாடு செய்து கொள்­ளப்­பட்ட போது, இலங்­கையில் மோதல்­களை முடி­வுக்கு கொண்டு வந்து தமி­ழர்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­கா­கவே, இந்­தியா தலை­யீடு செய்து இந்­திய – -இலங்கை சமா­தான ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­திட்­ட­தாக இந்­தி­யத்­த­ரப்பு கூறி­யி­ருந்­தது.

அதே­வேளை, அந்த ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டப்­ப­டு­வ­தற்கு முன்னர், அதன் உள்­ள­டக்­கங்கள் குறித்து தமிழர் தரப்­புக்கு தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­கரன் சுது­ம­லையில் இருந்து ஹெலி­கொப்­டரில் ஏற்றிச் செல்­லப்­பட்டு, புது­டெல்­லியில் உள்ள அசோக் ஹோட்­டலில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்தார். ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டப்­ப­டு­வ­தற்கு முதல் நாள், அவ­ரிடம் ஒப்­பந்த நகல் கொடுக்­கப்­பட்­டது.

அதில் உள்ள முரண்­பா­டுகள் மற்றும் ஏற்க முடி­யாத விட­யங்­களை பிர­பா­கரன் சுட்டிக் காட்ட முயன்ற போது, சந்­தே­கங்­களை எழுப்ப முயன்ற போது, அவ­ருக்கு எந்தப் பதிலும் அளிக்­கப்­ப­ட­வில்லை.

அவற்றை கேட்­ப­தற்கும் இந்­திய தரப்பு தயா­ராக இருக்­க­வில்லை.

இது ஏற்­கெ­னவே தீர்­மா­னிக்­கப்­பட்டு விட்ட ஒன்று, இதில் திருத்­தங்­களை முன்­வைக்க முடி­யாது என்றும் அவ­ருக்கு கூறப்­பட்­டது.

அவர் எதிர்ப்புத் தெரி­வித்து, முரண்­பட்ட போது தான், விடு­தலைப் புலி­களின் தலைவர் அங்கு ‘அழைத்து வரப்­ப­ட­வில்லை’ என்­பதும், அவர் ‘அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்தார்’ என்­பதும் தெரி­ய­வந்­தது.

இந்த விட­யத்தில் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் இந்­திய அர­சாங்­கத்­துக்கும் கடு­மை­யான முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன.

அசோக் ஹோட்­டலில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பிர­பா­கரன், அச்­சு­றுத்­தப்­பட்டார், ஒப்­பந்­தத்தை ஏற்றுக் கொள்ள நிர்ப்­பந்­திக்­கப்­பட்டார்.

அதனை ஏற்றுக் கொள்­ளா­மல்­போனால், திரும்பிச் செல்ல முடி­யாது என்ற அச்­சு­றுத்­தலும் அவ­ருக்கு கொடுக்­கப்­பட்­டது.

அந்த சந்­தர்ப்­பத்தில், அவரை மீண்டும் கொண்டு வந்து தம்­மிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு தமிழ் மக்கள் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

தான் புது­டெல்­லியில் இருந்து திரும்­பினால் தான் இந்த ஒப்­பந்தம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வதை தடுக்க முடியும் என பிர­பா­கரன் உணர்ந்தார்.

அதனால் தான் அவர் அந்த ஒப்­பந்­தத்­திற்கு தவிர்க்க முடி­யா­த­படி இணங்­கு­வ­தாக கூறி மீளவும் நாடு திரும்­பினார்.

அவர் சுது­ம­லையில் இடம்­பெற்ற கூட்­டத்தில் உரை­யாற்­றிய போது, இந்த ஒப்­பந்­தத்தில் தமி­ழர்­க­ளுக்கு நன்மை எதுவும் இல்லை என்றும், இந்­தியா கூறு­வதால் அதன் பொறுப்­பி­லேயே தமி­ழர்­களின் பாது­காப்பை ஒப்­ப­டைப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

சில மாதங்­க­ளி­லேயே, விடு­தலைப் புலிகள் மீது இந்­திய இரா­ணுவம் ஆரம்­பித்த போரில் வெற்றி பெற முடி­யாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்­பட்­டது.

இந்த சம்­ப­வமே ராஜீவ் காந்­தியை மரணம் வரை அவரை துரத்திச் சென்­ற­தாகவும், – பிர­பா­கரன் புது­டெல்­லியில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த சம்­ப­வத்­திற்கு பழி­வாங்கும் நோக்­கி­லேயே ராஜீவ் காந்­தி படு­கொலை செய்­யப்­பட்­ட­தா­கவும் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டன.

எவ்­வா­றா­யினும், ராஜீவ் காந்தி படு­கொ­லைக்கு பழி தீர்க்கும் வகை­யி­லேயே இந்­தியப் தரப்பு விடு­தலை புலி­களை அழிப்­பதில் தீவி­ர­மாக இருந்­தது. 2009 ஆம் ஆண்டு காங்­கிரஸ் கட்சி ஆட்­சியில் இருந்­த­போது அந்தப் பழியை தீர்த்துக் கொண்­டது.

இந்­திய- — இலங்கை ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டப்­பட்ட போது, அது இந்­தி­யாவின் நிர்ப்­பந்­தத்தின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட ஒன்­றா­கவே இலங்கை அர­சாங்­கமும் கூற­மு­னைந்­தது. அப்­போது ஜே.ஆர். அர­சாங்கம் அந்த உண்­மையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை.

ஜே.வி.பி.யின் இரண்­டா­வது ஆயுதக் கிளர்ச்சி தீவி­ர­ம­டைந்து கொண்­டி­ருந்த அந்தக் கட்­டத்தில், ஒரு பக்கம் விடு­தலைப் புலி­க­ளையும் இன்­னொரு பக்கம் ஜே.வி­.பி.s­யையும் சமா­ளிக்க முடி­யாத நிலை ஏற்­ப­டு­வதை உணர்ந்த, ஜே.ஆர், இந்­தி­யா­வுடன் உடன்­பாடு செய்து கொண்டார்.

அதன் மூலம், விடு­தலைப் புலி­களை கையாளும் பொறுப்பை இந்­தி­யா­விடம் கொடுத்தார். இரு­வ­ரையும் மோத விடு­வ­தற்­கான சரி­யான சந்­தர்ப்­ப­மாக அவர் அதனைக் கரு­தினார்.

முன்னர், இந்­தி­யாவே விடு­தலைப் புலி­க­ளுக்கு ஆயு­தங்கள், பயிற்­சிகள் போன்­ற­வற்றை வழங்­கி­யது.

விடு­தலைப் புலி­களை ஊட்டி வளர்த்த இந்­தி­யாவே அவர்­களை அழிக்கும் நட­வ­டிக்­கையை ஆரம்­பிக்க, இன்­னொரு பக்கம் ஜே.வி.பியை அழிக்கும் வேலையை ஜே.ஆர். ஆரம்­பித்தார்.

இந்­திய – – இலங்கை ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டப்­பட்ட போது, யாழ்ப்­பா­ணத்தின் மீது பாரிய படை­யெ­டுப்பு ஒன்றை நடத்­து­வ­தற்கு இலங்கை இரா­ணுவம் தயா­ராகி வந்­தது.

ஏற்­கெ­னவே வட­ம­ராட்­சியை இலங்கை இரா­ணு­வத்­தினர் கைப்­பற்­றி­யி­ருந்­தனர்.

அவர்­களின் அடுத்த இலக்­காக இருந்­தது, யாழ்ப்­பாணம்.

அதனை கைப்­பற்­று­வ­தற்குள் தங்­களின் திட்­டத்தை செயற்­ப­டுத்த முடி­யாமல் இந்­தியா தடுத்து விட்­டது என இலங்கை இரா­ணுவ அதி­கா­ரிகள் பலர் வெறுப்­ப­டைந்­தி­ருந்­தார்கள்.

லெப்.ஜெனரல் டென்சில் கொப்­பே­க­டுவ, மேஜர் ஜெனரல் விஜய விம­ல­ரத்ன போன்ற, அப்­போ­தைய நட்­சத்­திர நிலை இரா­ணுவ தள­ப­திகள் அதை­யிட்டு கடு­மை­யாக கோப­ம­டைந்­தனர் என்று, ‘நந்­திக்­க­ட­லுக்­கான பாதை’ நூலில் மேஜர் ஜெனரல் கமல் குண­ரத்ன குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

இலங்­கையின் இறை­மையை பாது­காப்­ப­தற்­காக, இலங்கை பிள­வு­ப­டாமல் தடுப்­ப­தற்­காக, தமி­ழர்­களின் போராட்­டத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே ராஜீவ் காந்தி ஒப்­பந்­தத்தை செய்து கொண்டார் என்றால், ஏன் இலங்கை இரா­ணு­வத்­தினர் அப்­பொ­ழுது கோப­ம­டைந்­தார்கள்?

அந்த உண்­மையை ஜே.ஆர் ஜய­வர்­தன அர­சாங்கம் ஏன் தனது இரா­ணுவ அதி­கா­ரி­க­ளுக்கு கூறத் தவ­றி­யது என்று தெரி­ய­வில்லை.

ஆனால், இப்­பொ­ழுது மணி­சங்கர் ஐயரின் வாக்­கு­மூ­லத்தின் படி, ராஜீவ் காந்தி தமிழ் மக்­களின் மீது கொண்ட பற்­றி­னாலோ -பாசத்­தி­னாலோ – இந்­திய — இலங்கை உடன்­பாட்டை செய்து கொள்­ள­வில்லை என்­பது தெளி­வாகத் தெரி­கி­றது.

தமிழர் பிரச்­சி­னையை தீர்க்க வேண்டும் என்ற அக்­க­றை­யினால், அவர் இந்த விட­யத்தில் தலை­யீடு செய்­ய­வில்லை என்­பது உறு­தி­யா­கி­யி­ருக்­கி­றது.

இந்­திரா காந்­தியின் காலத்­தி­லேயே விடு­தலைப் புலிகள் உள்­ளிட்ட தமிழ் அமைப்­பு­க­ளுக்கு, ஆயுதப் பயிற்­சிகள், ஆயு­தங்கள் வழங்­கப்­பட்­டன.

ராஜீவ் காந்தி ஆட்­சிக்கு வந்த பின்னர், அவ்­வா­றான நிலை இருக்­க­வில்லை.

இந்­திரா காந்­தியின் நிலைப்­பாடு எத்­த­கை­ய­தாக இருந்­தது என்­பது இன்­னமும் மர்­ம­மா­கவே இருக்­கி­றது.

ஆனால், ராஜீவ் காந்­தியின் நிலைப்­பாடு தமி­ழர்கள் மீது அக்­கறை கொண்­ட­தாக இருந்­தி­ருக்­க­வில்லை.

அது முற்­று­மு­ழு­தாக இலங்­கையை சித­றாமல் பார்த்துக் கொள்­வ­திலும், அதன் மூலம் இந்­தி­யாவின் பூகோள ஒரு­மைப்­பாட்டை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தி­லுமே, இருந்­தி­ருக்­கி­றது.

இலங்கை பிள­வு­பட்டால்- இந்­தி­யாவும் பிள­வு­படும், தமிழ்­நாடு தனித்து போய்­விடும் என்ற அச்சம் அவ­ரி­டத்தில் இருந்­தி­ருக்­கி­றது.

அதனால் தான், அவர் இலங்­கையில் தலை­யீடு செய்து இரண்டு நாடு­க­ளி­னதும் இறை­மையை பாது­காக்க முற்­பட்­டி­ருந்தார்.

ஆனால், அவ­ருக்கு இரண்டு நாடு­க­ளி­லுமே முழு ஒத்­து­ழைப்பு கிடைத்­தி­ருக்­க­வில்லை என்­பது தான் உண்மை.

தனது நாட்டு இரா­ணு­வமும் புல­னாய்வு அமைப்­பு­களும் அவ­ரது சிந்­த­னையை புரிந்து கொள்­ள­வில்லை என்றும் அவரை ஏமாற்றி விட்­டன என்றும் மணி­சங்கர் ஐயர் கூறி­யி­ருக்­கிறார்.

இந்­திய இரா­ணுவம் தவ­றான மதிப்­பீ­டு­க­ளுடன் விடு­தலைப் புலி­களை எதிர்­கொண்­டது.

இந்­திய புல­னாய்­வுத்­து­றையும் விடு­தலைப் புலிகள் பற்­றிய தவ­றான மதிப்­பீ­டு­க­ளையே செய்­தி­ருந்­தது.

அது, இந்­தி­யாவின் பின்­ன­டை­வுக்கு முக்­கி­ய­மான காரணம்.

ஆனால், மணி­சங்கர் ஐயரோ, ராஜீவ் காந்­திக்கு இந்திய இராணுவமும் புலனாய்வு அமைப்புகளும் துரோகம் செய்து விட்டதாக, ஏமாற்றி விட்டதாக குறிப்பிட்டிருக்கிறார்.

எவ்வாறாயினும், மணிசங்கர் ஐயர் கடைசியாக குறிப்பிட்டுள்ள ஒரு விடயம் முக்கியமானது.

மோசமான தலைமைத்துவமும், தமிழ் தலைவர்கள் பற்றிய தவறான மதிப்பீடும் ராஜீவ் காந்தியின் கொள்கையின் வீழ்ச்சிக்கு காரணம் என்றும், அது அவரை அரசியல் ரீதியாக பெரும் விலை கொடுக்கும் நிலைக்குத் தள்ளியது என்றும் மணிசங்கர் ஐயர் கூறியிருக்கிறார் .

தமிழ் தலைவர்கள் என்று அவர் குறிப்பிட்டது, முக்கியமாக பிரபாகரன் பற்றிய மதிப்பீடேயாகும்.

தமிழ் தலைவர்களை விலை போகக் கூடியவர்களாக ராஜீவ்காந்தி கருதி இருந்தார்.

அந்தக் கருத்து தவறானது என்பதை அவர் பின்நாளில் புரிந்து கொண்டிருப்பார்.

அந்த தவறான மதிப்பீடு தான், ராஜீவ் காந்தியின் ஒட்டுமொத்த திட்டத்தையும் சீர்குலைத்தது. அவரது அரசியல் வீழ்ச்சிக்கும் வழி வகுத்தது.

ஆனால், ஒன்று ராஜீவ் காந்தி திட்டமிட்டது போல, இலங்கையின் பிளவை தடுப்பதில் எப்படியோ ஒரு வகையில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது மட்டும் உண்மை.

 

-ஹரி­கரன்-

Share.
Leave A Reply