நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக 123 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

குருணாகல், அநுராதபுரம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக 111 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதனால் பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடப்பெயர்ந்துள்ளன.

Share.
Leave A Reply